search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழே கிடந்த செயினை மீட்டு போலீசில் ஒப்படைத்த செவிலியருக்கு பாராட்டு
    X

    செவிலியரை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பாராட்டினார்.

    கீழே கிடந்த செயினை மீட்டு போலீசில் ஒப்படைத்த செவிலியருக்கு பாராட்டு

    • ஏ.டி.எம். மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடந்தது.
    • விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமான செயின் என தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் மகாலட்சுமி சென்றிருந்தார்.

    அப்போது ஏடிஎம் மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடப்பதை பார்த்துள்ளார். அந்த சங்கிலியை பூம்புகார் இன்ஸ்பெக்டர் நகரத்தினத்திடம் மகாலட்சுமி ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சங்கிலி உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தங்க சங்கிலியை ஒப்படைத்த சுகாதார செவிலியர் மகாலட்சுமியின் செயலுக்கு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார், கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில் செவிலியர் மகாலட்சுமி செயலை பாராட்டி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    Next Story
    ×