search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    • அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார்.
    • 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சொரத்தன்குழி பஸ் நிலையம் அருகே பாப்பா ன்கொல்லை பழனிவேல் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தங்கமணி கடையில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த மாம்பழம் என்கிற அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார். தங்கமணி தரமறுத்ததால் அவரை ஆபாசமாக திட்டினார்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி கடையில் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அசோக் ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • திருச்சியில் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
    • கொலை மிரட்டர் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்

    திருச்சி, 

    திருவானைக்காவல் மணல்மேடு ஐந்தாம் பிரகாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 27). கடந்த 26.10.2000ம் ஆண்டு சத்யாவின் தந்தை முருகனை திருவனைக்காவல் மேலகொண்டையம் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சச்சிதானந்தம் (வயது 25) என்பவர் கொலை செய்துவிட்டார்.இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சத்யா ஸ்ரீரங்கம் சன்னதி வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது சச்சிதானந்தம் சத்யாவை தடுத்து நிறுத்தி கத்தியைச் காட்டி மிரட்டி தந்தை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.இது குறித்து சத்யா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
    • இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கரூரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் இளம்பெண்ணை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த இளம்பெண் வாலிபரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அந்த வாலிபர் வர மறுத்து விட்டார். மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடு வதாக மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டுவதாகவும், தன்னிடம் இருந்து வாலிபர் வாங்கி 6 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டதாகவும், அதனை மீட்டுத் தர வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடியோ கால் செய்து ஆபாச படம் பிளே செய்யப்பட்டுள்ளது
    • வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டல்

    மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த மாதம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலை எடுத்துள்ளார். அப்போது ஆபாச படம் பிளே ஆகியுள்ளது. அதன்பின் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய மந்திரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகார் அடிப்படையில் டெல்லி மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப்பின் தற்போது போலீசார் முகமது வகீல், முகமகது ஷாகிப் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
    • இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.

    ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.

    தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,

    கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.

    • தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.

    அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.

    நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.

    இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
    • கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்கு, அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மகன் பிரேம்ராஜ் (32) என்பவர் வந்து தகராறு செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.
    • வாலிபருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    குனியமுத்தூர்,

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், எங்களது பகுதியை சேர்ந்த கார் பெயிண்டருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் எனது கணவரின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தேன்.

    இந்த நிலையில் எனது கணவர் தனியார் கார் பெயிண்டிங் கம்பெனி தொடங்க திட்டமிட்டார். இதற்காக எனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி கேட்டார். நான் முடிந்தால் வாங்கி தருகிறேன் என்று கூறியிருந்தேன். நான் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் எனது கணவர் மற்றும் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் எனக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.

    எனது கணவர் நான் பணம் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து எனக்கு தொல்லை கொடுத்தார். மேலும் எனது கணவர் என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து எனது உறவினர்களிடம் காண்பித்துள்ளார். பணம் வாங்கி தராவிட்டால் மார்பிங் செய்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே எனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் பெயிண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டில், கொடுமை, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா(வயது 36). இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அவர் வீட்டுக்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்தப் பகுதியில் உள்ளவர்களை மிரட்டி சத்தம் போட்டு உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து, டவர் மீது ஏறி அவரிடம் சமாதானம் பேசி கீழே இறங்க செய்தனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • மர்மநபர் டாக்டர் வெங்கடரமண்யாவிடம் அவரது பாஸ்போர்ட், முகவரி உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த வெங்கடரமண்யா சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோலாஸ் நகரை சேர்ந்தவர் வெங்கடரமண்யா (வயது36). டாக்டரான இவர், ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.

    அவரது டுவிட்டர் கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகம் ஆனார்.

    அப்போது அந்த நபர், டாக்டர் வெங்கடரமண்யாவிடம் அவரது பாஸ்போர்ட், முகவரி உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், டுவிட்டரில் இருந்த வெங்கடரமண்யா மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடரமண்யா இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் வெங்கடரமண்யாவுக்கு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மணப்பாறையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
    • புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை

    மணப்பாறை, 

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நல்லாம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலராக கணபதி ராஜ் உள்ளார். இவரின் அலுவலகத்திற்கு வந்த வீ.பூசாரி பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் வீரசங்கர் என்பவர், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து உள்ளார். முனியப்பன் இறந்து விட்டதாக கூறி, வாரிசு சான்றிதழ் கொடுத்து வீரசங்கரின் அண்ணன் விண்ணப்பித்து உள்ளது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கணபதி ராஜ் எடுத்து கூறி உள்ளார். இதனை ஏற்க மறுத்த வீரசங்கர், கிராம நிர்வாக அலுவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் கண்டிக்கவே வீரசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கணபதிராஜ் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×