search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது
    X

    பண்ருட்டி அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது

    • அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார்.
    • 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சொரத்தன்குழி பஸ் நிலையம் அருகே பாப்பா ன்கொல்லை பழனிவேல் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தங்கமணி கடையில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த மாம்பழம் என்கிற அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார். தங்கமணி தரமறுத்ததால் அவரை ஆபாசமாக திட்டினார்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி கடையில் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அசோக் ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×