search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை"

    • இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஆணையாளர் காந்திராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நேரில் வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. ஊடக பிரிவை சேர்ந்த சதீஷ், போராட்டத்தில் பதட்டம் நிலவுவதாகவும், அனைவரும் உடனே வரவேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர். இதனை அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் முதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • திட்டக்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே100 நாள் வேலை திட்டத்தில் கள ஆய்வின்போது இல்லாத பணியாளர்களுக்கு வருகை பதிவேட்டில் விடுப்பு என குறிப்பிடப்பட்டதால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள பணிகளை ஆய்வு செய்வதற்காக மங்களூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பணியில் இல்லாதவர்களை வருகை பதிவேட்டில் விடுப்பு என அறிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவட்டி- திட்டக்குடி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 13 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.

    ஏற்கனவே வழக்கமாக யார் பூைஜ செய்தார்களோ அந்த பூசாரிகளே பூஜை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் சார்பில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமிக்க வேண்டும் என அமைதிபேச்சுவார்தையில் தீர்வு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

    இதையடுத்து மற்றொரு தரப்பினர் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமித்து பூைஜ நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிநடப்பு செய்தவர்கள் நாங்களும் பூசாரி நியமித்து பூைஜ செய்கிறோம் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழா முடிந்து பிறகு அமைதி பேச்சுவார்தை நடத்தி யாரை நியமிக்கலாம் என முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனால் மோதல் ஏற்பட்டு விடாமல் இருக்க முன்எச்சரிக்கையாக கோவில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • தமிழ்செல்வன் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
    • அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20)கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர். இவர் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் சொந்த ஊரான பண்ருட்டி உட்கோட்டம் புதுப்பேட்டை போலீஸ் சரகம் மணப்பாக்கம் ஊராட்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது மரியாதை செலுத்த வந்த பெரியார் கலை கல்லூரி மாணவர்கள், உறவினர்கள், கிராமத்தினர், அதே ஊராட்சியை சேர்ந்த சுரேந்தர், மாவட்ட தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி சியாமளா சுரேந்தர், மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரசு அறிவித்த 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அனைவரையும் திரட்டி கடலூர் - மடப்பட்டு சாலை அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
    • அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்து கட்டினார். கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பிரமுகர்கள் கண்ணனிடம் பேசி, உங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் வீடு கட்டிக் கொள்ளுங்கள், சாலை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கூறினர். இருந்தபோதும் கண்ணன் தொடர்ந்து வீடு கட்டும் பணியை மேற்கொண்டார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரிடம் (32) முறையிட்டனர். அவரும் வருவாய்த் துறையில் உள்ள நில அளவையரை அழைத்து வந்து கண்ணனுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தார். அப்போது கிராம சாலையில் 4 அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வீடு கட்டக்கூடாதென பஞ்சாயத்து தலைவர் அறிவுறுத்தி சென்றார். இதனை மீறி கண்ணன் மீண்டும் வீடு கட்டவே, ஊர் பிரமுகர்கள் கண்ணனை அழைத்து நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணன், அவரது மகன்கள் பொன்மணி (25), வெற்றிவேல் (23), செல்வக்குமார் (19) ஆகியோருடன் வந்தார். 4 அடி ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க ஊர் பிரமுகர்கள் சொன்னதால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது மகன்களை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு சென்றார். தான் கொண்டு சென்ற கடப்பாறை மூலம் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரின் வீட்டை இடிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது மகன்கள் கொடுவா கத்தியால் பஞ்சாயத்து தலைவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சசிக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு கண்ணன் மற்றும் அவரது 3 மகன்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்மந்தமாக பொன்மணி, வெற்றிவேல், செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணன் எங்குள்ளார் என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது.
    • இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்க்கல் பூண்டி சுற்றுவட்டார பகுதியில் மிகக் குறைவான மின்னழுத்தம் வருவதாகவும் முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து ராமநத்தம், ஆத்தூர் சாலையில் கீழ்க்கல் பூண்டி பஸ் நிறுத்தம் அருகில் மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
    • சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் நடப்பட்டது. அனுமதியின்றி நடப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது நாள் வரை கொடிகம்பம் அகற்றா ததால் ஆத்திரமடைந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் எனக் கூறினர். சாலை மறியல் தொட ர்ந்து நடைபெறுவதால் சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    • இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் சில தினங்களுக்கு முன்பு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் . கடலூர் புதுநகர் போலீசார் உரிய அனுமதியில்லாமல் கொடி கம்பம் வைக்க கூடாது என தெரிவித்தனர். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது. ஏற்கனவே இருந்த இடத்தில் கொடி கம்பம் புதியதாக வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிமெண்ட் கட்டை கட்டி கொடிக்கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக கூறி அதிரடியாக கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடி கம்பம் அகற்றியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் நிர்வாகிகள் மத்தியில் பரவியதால்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    உடனடியாக மீண்டும் இன்று காலை புதிதாக கொடி கம்பம் வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரண்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.

    • பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாச மாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார்.
    • தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வசந்த் (27). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாசமாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது செல்போனை நண்பர் தினேசிடம் (27) அடமானம் வைத்துள்ளார். நேற்று தினேஷ் செல்போனை எடுத்து பார்த்த போது தனது கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமா சித்தரித்து வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே இத்தகவல் வீரசோழபுரம் கிராமத்தில் காட்டுத்தீயாய் பரவியது. உடனே திரண்டு வந்த பெண்கள் தினேசிடம் போனை பிடுங்கி அதிலிருந்த புகைப்படங்களை பார்த்து கொந்தளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தும் வசந்த் கிராமத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக போலீசாார் வசந்த் இருக்கும் இடத்தை கண்டறிந்து முரார்பாளையம் அருகே அவரை கைது செய்தனர்.

    ஆனால் வசந்தை தங்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி கிராம மக்கள் 300பேர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கைது செய்த வசந்தை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலை மறியல் கைவடுவதாக தெரிவித்தனர். இதனிடையே கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட னர். தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வசந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர் தினேஷையும் போலீசார் கைது செய்தனர். ரவியை தேடி வருகின்றனர். ரவி குடும்பத்திற்கும் தினேஷ் குடும்பத்திற்கும் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் வசந்த் குடும்பத்தை பழிவாங்க ரவி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது தெரிய வந்தது.

    • பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    திருக்குவளை ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வம் , திருக்குவளை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.

    இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
    • இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சரகம் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சிறு விவசாயிகள் அனுபவித்து வரும் நத்தம் இடத்தை வேறொருவர் நபர்களுக்கு சிட்டா அடங்கல் வழங்கி நில அபகரிப்பு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அம்மாபேட்டை விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழுவின் சார்பில் உண்ணாவிரதபோராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இதுகுறித்து பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மகாபிரபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் சின்னராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கொத்தங்குடி கிராமத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு

    கன்னியாகுமரி, ஆக.27-

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் அவர்களது எதிர்ப்பை மீறி பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. அதனை மூட வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 25-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களுடன், நாகர்கோ வில் ஆர்.டி.ஓ. சேது ராம லிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இதைத்தொ டர்ந்து கடந்த 18 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×