search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voltage"

    • முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது.
    • இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்க்கல் பூண்டி சுற்றுவட்டார பகுதியில் மிகக் குறைவான மின்னழுத்தம் வருவதாகவும் முறையான மின்வினியோகம் வழங்காததால் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து ராமநத்தம், ஆத்தூர் சாலையில் கீழ்க்கல் பூண்டி பஸ் நிறுத்தம் அருகில் மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்கபட்டது.
    • புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது. இதை போக்குவதற்கு புதிதாக இரண்டு 100 கே .வி .ஏ. மின் மாற்றிகள் அமைக்கபட்டது.

    இந்த புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார். விழாவில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார், இள மின் பொறியாளர் அன்பரசன் மனோகரன் மற்றும் மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மின் மாற்றி மூலம் சீரான மின் அழுத்தம் கிடைக்கும்.

    இதே போல் 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்க பட்டது.

    குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு வேதாரண்யம் பகுதியில் 257 மின் மாற்றிகள் இயக்கி வைக்கபட்டுள்ளதாக செயற்பொறியாளர் சேகர் தெரிவித்தார்.  

    சார்ஜரில் இருந்து செல்போனை எடுக்காமல் செல்போனில் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    ஓங்கோல்:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வகுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான் ரெட்டி (வயது 32). அவர் நேற்று தன்னுடைய வீட்டில் செல்போனுக்கு ‘சார்ஜ்’ ஏற்றினார்.

    அப்போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் ‘சார்ஜரில்’ இருந்து செல்போனை எடுக்காமல் அப்படியே பேசினார். செல்போனில் அதிக சூடு ஏறியதால் திடீரென அது வெடித்தது. அதே சமயம் மஸ்தான் ரெட்டி மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×