சின்னமுட்டத்தில் 18 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் உடன்பாடுபெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு
சின்னமுட்டத்தில் 18 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்
Published on

கன்னியாகுமரி, ஆக.27-

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

இருப்பினும் அவர்களது எதிர்ப்பை மீறி பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. அதனை மூட வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 25-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களுடன், நாகர்கோ வில் ஆர்.டி.ஓ. சேது ராம லிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இதைத்தொ டர்ந்து கடந்த 18 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com