search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகங்கள்"

    • கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.
    • மக்கள் புத்தகங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் சிறைகளில் கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.

    இங்கு சுழற்சி முறையில் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு கைதிகள் படிப்பதற்காக வைக்கப்படுகின்றன. கோவை மத்திய சிறை வளாகத்திலும் நூலகம் உள்ளது. இந்தநிலையில் சிறைத்துறை டி.ஜி.ப.அமரேஷ் பூஜாரியின் உத்தரவின் பேரில் கைதிகளின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் தானம் பெறும் கூண்டுக்குள் வானம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வதற்கான அரங்கு அமைக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களால் தானமாக வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பல்க் வளாகத்தில் புத்தக தானம் பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சிறைவாசிகளின் நலனுக்காக புத்தக தானம் வழங்க விரும்பும் பொது மக்கள் புத்த கங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது . 

    • மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
    • ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

    அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.

    சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

    ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.

    என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
    • கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    குத்தாலம்:

    யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.

    இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.

    இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.

    அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.

    இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம்.
    • 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூலகத்தினை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் எஸ் .எஸ். பழநிமாணிக்கம் தெ எம்.பி. கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும்.

    அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் இயங்கிடும் 259 கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 250 நூலகங்களை அமைத்திட இந்த 1 லட்சம் ரூபாயில் ரூ.50,000- செலவில் புத்தகங்களையும் ரூ.50,000- செலவில் தளவாட சாமான்களையும் அரசால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் , உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள், தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள், மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இவ்நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கல்லூரி மாணவ மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்ப டுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, விடுதி காப்பாளர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புத்தக திருவிழா வில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த புத்தகத் திருவிழா வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சி யானது தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 9-ம் நாளான இன்று காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஸ்பெல் பீ போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு டாக்டர்.ஜெயக்குமாரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.

    மாலையில் சேலம் பெரி யார் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் "காலநிலை மாற்றம்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆத்தூர் சுந்தரம் "தட்டி எழுப்பும் தாலாட்டுகள்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். 

    • 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
    • ரூ. 1000 பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராவேன்.

    தரங்கம்பாடி:

    உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப்பெண்" திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்சிவ.வீ.மெ ய்யநாதன் வழங்கினார்.

    புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

    இது குறித்து மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி கயல்விழி கூறும்போது:-

    என் உடன் பிறந்தோர் மூன்று பெண்கள், நான் மூத்தப்பெண். என் போன்ற ஏழை மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் வரபிரசாதமாகும்.

    வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகின்ற பெண்கள் வாட்டமின்றி, வருத்தமின்றி பட்டப்படிப்பு வரை மகிழ்வோடு பயில இயலும் உரிய – உயரிய அரசுப்பணிக்கு செல்லமுடியும். நான் ரூ. 1000-ம் பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராக ஆவேன் என்றார்.

    ஏ.வி.சி. கல்லூரி மாணவி ஹரினி கூறும்போது:-முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ரூ.1000-ம் பணத்தை நான் கல்விக்காக பயன்படுத்துவேன். மீண்டும் ஒருமுறை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.கலைமகள் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ கூறு ம்போது

    புதுமைப்பெண் திட்ட த்தின் கீழ் ரூ.1000-ம் பெற்றுக்கொண்டேன். என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    • இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.
    • சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 1958-ம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது.

    நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் பழுதடைந்து இடிக்கப்பட்டது.

    அன்று முதல் வேதாரண்யம் பயணியர் மாளிகை செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    தற்போது இந்த கட்டிடமும் பழுதடைந்து மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது.

    தற்போது நூலகத்தில் 45 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

    இதில் 4,100 நபர்கள் உறுப்பினராகவும், 32 புரவலர்களும் உள்ளனர்.

    நாள்தோறும், இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.

    மேலும், தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    நிறைய வாசகர்கள் ஒரே நேரத்தில் படிக்க வந்தால் படிக்க முடியாமல் இடநெருக்கடியும் ஏற்படுகிறது.

    இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    வேதாரண்யம் நூலகத்திற்கு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முன்பு நூலகம் இயங்கிவந்த சுமார் 3000 ஆயிரம் சதுர அடி இடம் காலியாக உள்ளது.

    எனவே, வேறு ஒரு துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு புதிதாக காலியாக உள்ள பழைய இடத்தில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நோட்டு விநியோகம் நிறுத்தப்பட்டது.
    • நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    அரசு, அரசு உதவி ெபறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் 14 வகையான இலவச திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன்படி புதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

    சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.

    இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த 13-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திய பிறகும் அவற்றை குறிப்பெடுக்க நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஆணையரகம் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தில் தயாராகும் நோட்டு புத்தகங்களை பள்ளிகளுக்கு வாங்குவதற்கும், உரிய வழிகாட்டுதல் அளிக்காததால், இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்கள் பாட அம்சங்களை குறிப்பெடுத்துக்கொள்ள நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 749 மையங்களில் 30 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு திட்டம் தொடக்கம் தொடங்கியது.
    • தியாகராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக 749 மையங்களில் 29 ஆயிரத்து 991 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கற்றுத்தரும் பணி தொடங்கியுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறி னார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார்.

    திட்டத்தைத் தொடங்கி வைத்து, கற்போருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசியதாவது:-

    விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ங்களை முன்னுரிமை பெறும் மாவட்டங்கள் என 2019-ம் ஆண்டு அறிவித்து ஒவ்வொரு துறையிலும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அரசு நிறை வேற்றி வருகிறது.

    இதன்படி சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் சார்பில் முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் 2019-2020 ஆண்டில் 615 மையங்களில் தலா 40 பேருக்கும், 2020-2021 ஆண்டில் 1124 மையங்களில் தலா 40 பேருக்கும் அடிப்படை எழுத்தறிவு 6 மாதங்கள் தன்னார்வலர்கள் மூலம் இரவு நேரங்களில் கற்றுத் தரப்பட்டு, இவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்ப ட்டது.

    தற்போது 3-வது இறுதி கட்ட எழுத்தறிவுத் திட்டம் ஜூன் மாதம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்களில் தொடங்க ப்பட்டுள்ளது. இதில் 29,991 பேருக்கு எழுத்தறிவு 6 மாதங்கள் கற்றுத்தரப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை உரு வாகும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர் கற்பகம், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம், நாமக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 8 வயது வரையிலான குழந்தைகள் எண்ணையும், எழுத்தையும் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு மாவட்ட வாரியாக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 1,2,3 -ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து தனித்தனியே பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 3.23 லட்சம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மூலம் புத்தகம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்,

    வருகிற 13-ந் தேதி ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. புதிய கல்வியாண்டை வரவேற்கும் விதமாக பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து வகுப்புக்கும் அட்மிஷன் துவங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 3.23 லட்சம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தாலுகா, பள்ளி வாரியாக பிரிக்கும் பணி, ரெயில் நிலையம் அடுத்த தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது.

    1 முதல் 5-ம்வகுப்புகள் வரையிலான பாடப்புத்தகங்கள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரையிலான பாடப்புத்தகங்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் வழங்கப்பட்டது. ஆட்டோக்கள் மூலம் புத்தகங்களை பள்ளிக்கு அவர்கள் எடுத்துச்சென்றனர். இன்று மாலைக்குள் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும், புத்தகங்கள் சென்று சேர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ், ஆங்கிலம், முக்கிய பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தருவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மூலம் புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஒவ்வொரு பள்ளி வகுப்பறையில் ஏற்கனவே உள்ள மாணவர் எண்ணிக்கை புதிதாக பள்ளியில் சேரும் மாணவர் தோரய எண்ணிக்கை கணக்கிடப்பட்டு புத்தகங்கள் தலைமை ஆசிரியர் வசம் வழங்கப்பட்டுள்ளது.

    ×