search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dispatch"

    • மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
    • பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்,:

    ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்து பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை. தொடர்ந்து பல மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியன மாத இறுதி நாட்களிலேயே வழங்கப்படுகிறது.இதனால் ரேஷன் விற்பனையாளர் - பொதுமக்களிடையே வீண் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மிகுந்த மன உளைச்சலுக்கு ரேஷன் பணியாளர் தள்ளப்படுகின்றனர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்நிலையில், இம்மாதமும் குடோன்களில் துவரம்பருப்பு, பாமாயில் இல்லாமலேயே, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு விழா வரும் ஜூலை மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த ராஜகோபுரத்தில் 7 நிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக 7 கோபுர கலசங்களை நேர்த்தி கடனாக வழங்கும் பணி நேற்று பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் மாரியம்மன் கோவி லில் நடைபெற்றது.

    இந்த கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாயிகள் பொன்னர், சங்கர் சகோதரர்கள் வழங்கியுள்ளனர்.

    செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் சுமார் 4¾ அடி உயரம் கொண்டது. இந்த கலசங்கள் அனைத்திற்கும் நன்செய் இடையாறில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கலசங்கள் எடுத்துச் சொல்லும் வாகனத்திற்கு மலர்தூவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இந்த வாகனம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரமத்தி–வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் முசிறி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைகிறது.

    • சேலம், நாமக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 8 வயது வரையிலான குழந்தைகள் எண்ணையும், எழுத்தையும் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு மாவட்ட வாரியாக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 1,2,3 -ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து தனித்தனியே பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ×