search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insists"

    • மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
    • பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்,:

    ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்து பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை. தொடர்ந்து பல மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியன மாத இறுதி நாட்களிலேயே வழங்கப்படுகிறது.இதனால் ரேஷன் விற்பனையாளர் - பொதுமக்களிடையே வீண் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மிகுந்த மன உளைச்சலுக்கு ரேஷன் பணியாளர் தள்ளப்படுகின்றனர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்நிலையில், இம்மாதமும் குடோன்களில் துவரம்பருப்பு, பாமாயில் இல்லாமலேயே, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 25 ஆண்டுகளில் வாகனங்களின் மீது இதுபோன்ற ஒரு வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது இல்லை.
    • இந்த வரி உயர்வால், மறைமுகமாக அனைத்தின் விலையும் உயர்ந்து பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    திருப்பூர்:

    சட்டசபையில் அனைத்து விதமான வாகனங்களுக்கும் வாகன வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வரி உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

    கோவை, திருப்பூர் மாவட்ட பொக்லைன் எந்திர உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜே.சி.பி., எந்திரங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வாகனங்களின் மீது இதுபோன்ற ஒரு வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது இல்லை.

    உதாரணத்துக்கு தற்போதைய சூழலில் 10 லட்சம் ரூபாய்க்கு புதிய வாகனம் வாங்கினால், வரியுடன் சேர்த்து, 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இதனால், புதிதாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். புதிய பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விலையும் உயரும். இதன் அடிப்படையில் வண்டி வாடகை, ஆள் கூலி, இதர பொருட்களின் விலை உள்ளிட்டவையும் உயரும்.

    ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, ஜே.சி.பி., வாடகை கடந்த ஓராண்டுக்கு முன் உயர்த்தப்பட்டது. உயர்த்திய வாடகையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரி உயர்வால் புதிதாக வண்டி வாங்கி வாடகைக்கு தொழில் செய்ய நினைப்பவர்கள் யோசித்துப்பாருங்கள். இதனால் பழைய வாகனங்களை விற்பனை செய்பவர்கள் மட்டும் பயன்பெறுவார்கள்.

    மற்றபடி வாகன தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வரி உயர்வால், மறைமுகமாக அனைத்தின் விலையும் உயர்ந்து பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே வரி உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலித்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு
    • ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பவானி ஆற்றில் நீர் பாசன திட்டம், நீர்ப்பாசன அனுமதி கேட்டு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.

    பவானி ஆற்று நீர்பாசன விவசாயிகள் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் பி.என்.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் டி.டி.அரங்கசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் ஆகியோர் சிறபு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கூட்ட்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பவானி ஆற்றில் ஆண்டுக்கு 70 டி.எம்.சி தண்ணீர் வருகிறது. இதில் குடிநீர், மற்ற தேவைகளுக்கு 10 டி.எம்.சி நீர் போக மீதமுள்ள 60 டி.எம்.சி தண்ணீரில் 6 லட்சம் ஏக்கர் விவசாயம் மேற்கொள்ளலாம். அதன்படி நெல்லித்துறை முதல் பெத்திக்குட்டை வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 80 ஆண்டுக்கும் மேலாக பவானி ஆற்றின் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகிறோம்.

    கடந்த 2017-ல் பவானி ஆற்றில் தண்ணீர் வற்றவே, பம்ப் மோட்டார் மூலம் ஆற்றில் தண்ணீர் எடுக்க அரசு தடை விதித்தது. இதையடுத்து அப்போதைய எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஏ.கே.செல்வராஜ், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பேசி விவசாயிகளுக்காக உரிய நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பவானி ஆற்றில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெத்திக்குட்டை பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் வறட்சி காலங்களில் கூட விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது.

    நதியின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு நதியில் பாயும் தண்ணீரை பயன்படுத்த உரிமை உண்டு என சட்டம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த பாசன வசதியும் ஏற்படுத்தி கொடுக்க அரசு முன் வருவது இல்லை.

    எனவே பவானி ஆற்றில் பாசனத்திற்கு அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுத்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதோடு இப்பகுதி மற்ற விவசாயிகளுக்கும் பாசன திட்டத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், காரமடை தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் என்ற சிவக்குமார், தொழில் அதிபர் நந்தக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்தையொட்டிய விளைநிலங்களில் எந்தவித விவசாயமும் கடந்த 6 ஆண்டுகளாக நடக்கவில்லை.
    • சோலார் மின் வேலி அமைத்து விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனித -வனவிலங்குகள் மோதல், பயிர் சேதம் தொடர்பான விவசாயிகள், வனத்துறை, மாவட்ட நிர்வாக சார்பில் முத்தரப்பு கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பழனிசாமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

    வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால்' விவசாயிகளின் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பயிர் செய்யும் பரப்பளவு எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது. குறிப்பாக வனத்தையொட்டிய விளைநிலங்களில் எந்தவித விவசாயமும் கடந்த 6 ஆண்டுகளாக நடக்கவில்லை.

    சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களை வனத்துறையினரே ஆய்வு செய்து விவசாயிகளை அலை கழிக்காமல் உடனுக்குடன் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

    வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சேதமடைந்த அகழிகளை தூர்வாரி அதனை ஒட்டி சோலார் மின் வேலி அமைத்து விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை "களிறு" விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இக்கூட்டத்தின் மூலம் அரசுதிட்டங்களை விவசாயிகளுக்கு தெரிவி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு குழு ஒன்றை அரசு சார்பில் உருவாக்க வேண்டும்.

    வனவிலங்கு பிரச்சனை சம்பந்தமாக குறைகளை தீர்த்திட வனத்துறை சார்பில் மாதம் ஒரு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தும் திட்டம் நடைமுறையில் இல்லாததால் வனவிலங்கு களை கண்காணிக்க நவீன முறையில் புதிய திட்ட த்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வனப்பகுதிகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் வன அலுவலர்கள் வாகனங்கள் ரோந்து செல்வதற்கும் வன விலங்குகளை கண்காணிப்பதற்கும் பாதை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.

    வனவிலங்குகளுக்கு கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பகுதி வாரியாக நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வனபாதுகாப்பு சட்டத்தில் அதிகப்படியாக வனவிலங்குகளுக்கு கொடு க்கப்படும் முக்கியத்துவத்தை பரிசீலித்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

    பயிர்களையும் உயிர்களையும் பாதுகாத்திட விவசாய நிலங்களில் சுற்றி அமைக்கப்படும் சோலார் மின் வேலிகளுக்கு 90 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஓட்டி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.
    • தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது.

     கோவை,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஓட்டி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த பஸ்கள் தமிழகத்தின் அனைத்து கிராமப்புறங்களிலும் சென்று விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

    6000 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இருந்த நிலையில் 20-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் ஓடாமல் மினி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு புதர் மண்டி கிடப்பதை கண்கூடாக பார்க்கிறோம். டீசல் விலை உயர்வு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால் பஸ்களை இயக்குவது இல்லை என்று மினி பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் இந்த பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார்கள். இது நாள் வரையிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    கிராமப்புறத்தில் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவையில் சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மினி பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    • லிங்காபுரம், காந்தவயல், ஆளூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது 21 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி 1-வது வார்டில் லிங்காபுரம், காந்தவயல், உலியூர், காந்தையூர், ஆளூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    லிங்காபுரத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியை தாண்டி காந்தவயல், உலியூர், ஆளூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியள்ள நீலகிரி, கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும்.

    இந்த நேரத்தில் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் லிங்காபுரம், காந்தவயல் இடையே தண்ணீர் சூழ்ந்து இப்பகுதியிலுள்ள 21 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும். இதனால் விளை பொருட்களை எடுத்து செல்வதற்கும், பள்ளி, கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள். இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் கிராமத்தில் பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்.

    இதற்கிடையே இப்பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் 53 அடி உயரத்தில் 168 மீட்டர் நீளம் , 10 மீட்டர் அகலத்தில் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது கேரளா, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கான தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப் பணிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே லிங்காபுரம்-காந்தவயல் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்மட்ட பாலப்பணியை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர் மட்டம் ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் உயரும். இந்த காலக்கட்டத்தில் லிங்காபுரம்-காந்த வயல் இடையே உள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க கடந்த சில மாதங்களுக்கு முன் மேல்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பகுதியில் தண்ணீர் சூழும் நிலை உள்ளது. எனவே தண்ணீர் வருவதற்குள் இப்பகுதியில் மேல்மட்ட பாலத்திற்கான பணியை விரிவு படுத்த வேண்டும். இல்லையெனில் அனைத்து பணிகளும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இதனால் அரசுக்கும் பல லட்சம் இழப்பீடு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன், 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பனியன் தொழிலாளருக்கு விடுதி, கல்வி வசதியை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வலியுறுத்துவது, மின் கட்டண உயர்வை கைவிட அரசை வலியுறுத்துவது, பல்வேறு கோரிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பார்வைக்கு வைப்பது, சணல், தேங்காய் வாரியம் இருப்பது போல் பின்னலாடைக்கென வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் நிர்வாகி சிவக்குமார் மின் இயக்க சாதனங்கள் அவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்தும், ஆடிட்டர் அரசப்பன் மத்திய, மாநில அரசுகளின் மானியம், சலுகை குறித்தும் பேசினர்.

    ×