search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுப்பி"

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும்.
    • மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

        சேலம்:

    தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்பட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பவதாவது-

    பள்ளிக்கல்வித்துறையில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்கு பின்னர் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தவிர பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவல கங்கள், பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியாளர் விபரங்களையும் தனி அறிக்கையாக அனுப்ப வேண்டும் இநத பணி களின்போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவரின் விபர மும் விடுபடாதவாறு அறிக்கையை விரைவாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம், நாமக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 8 வயது வரையிலான குழந்தைகள் எண்ணையும், எழுத்தையும் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு மாவட்ட வாரியாக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 1,2,3 -ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து தனித்தனியே பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ×