search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநியோகம்"

    • விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது.
    • பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதி விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது. வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அட்மா திட்டக்குழு தலைவர் பரமசிவம் அப்பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமரைச்செல்வி, உதவி அலுவலர்கள் குப்புசாமி, ராஜா, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    அவிநாசி:

    பெருமாநல்லூா், செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    செங்கப்பள்ளி, ஜோதி நகா், சரவண நகா், ப்யூா் டிராப் கம்பெனி பகுதி, கேபிஆா் மில் பகுதி, கருடா நகா்.

    பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டி பாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, மற்றும் உகாயனூா்.

    • நாளை 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம் மற்றும் நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், இரெங்கே கவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தாம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினிேயாகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

    ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம். 

    • தஞ்சாவூா் நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் நாளை (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதனால், மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், திருநகா், ஆண்டாள் நகா், சிங்கபெருமாள் குளம், விக்னேஷ்வர நகா், உமா சிவன் நகா், வெங்கடாசலபதி நகா், பி.ஆா். நகா், ஜெபமா லைபுரம், சுந்தரபாண்டியன் நகா், டி.சி.டபிள்யூ.எஸ். காலனி, களிமேடு மூன்று மற்றும் நான்காம் பகுதிகள், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்த பிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம், வ.உ.சி. நகா், சிறுவா் சீா்திருத்தப் பள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசுமை உரம் வினியோகம் தொடங்கியது.
    • உத–ய–கு–மார், சர–வண–கு–மார் உள்–பட பலர் கலந்து ெகாண்–டனர்.

    கீழக்–கரை

    கீழக்–கரை நக–ராட்–சிக்கு உட்–பட்ட 21 வார்–டு–க–ளி–லும் தின–சரி சேக–ரிக்–கும் குப்–பை–கள் பள்–ள–ேமார்–கு–ளம் நுண் உர–மாக்–கும் ைமயத்–தில் இயற்ைக உர–மாக மாற–றப்–பட்டு வரு–கிறது. அதில் இருந்து தயா–ரிக்–கப்–பட்ட இயற்கை உரம், ேவளாண்மை துைற–யின் மூலம் ெசழிப்பு என்ற ெபய–ரில் வினி–ேயா–கம் செய்ய உரி–மம் ெபறப்–பட்டு நக–ராட்சி அலு–வ–ல–கத்–தில் இயற்ைக உரம் வினி–யோக ெதாடக்க நிகழ்ச்சி நடந்தது.

    3 கிேலா எடை ெகாண்ட உரம் நூற்றுக்கும் ேமற்–பட்ட ெபாது–மக்–க–ளுக்கு இல–வ–சமாக வழங்–கப்–பட்–டது. ேமலும், தின–மும் நக–ராட்–சி–யில் 3 கிேலா எைட ெகாண்ட உரம் ரூ.20-க்கு விற்பைன ெசய்–யப்–படும் என்று நக–ராட்சி ஆணை–யர் செல்வராஜ் ெதரி–வித்–துள்–ளார்.

    இந்–நி–கழ்ச்–சிைய நகர்–மன்ற தலை–வர் ெசஹா–னாஸ் ஆபிதா ெதாடங்கி ைவத்–தார். நக–ராட்சி சுகா–தார ஆய்–வாளர் பரக்–கத்–துல்லா, 4-வது வார்டு கவுன்–சி–லர் சூரி–ய–கலா, 7-வது வார்டு கவுன்–சி–லர் மீரான் அலி, நக–ராட்சி பணி ேமற்–பார்–ைவ–யா–ளர் ெசந்–தில்–கு–மார், இள–நிைல உத–வி–யா–ளர்–கள் தமிழ்–ெசல்–வன், உத–ய–கு–மார், சர–வண–கு–மார் உள்–பட பலர் கலந்து ெகாண்–ட–னர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை துறை மூலம் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய 50 சதவீதம் மானிய விலையில் சோளம் -கோ-32, நிலக்கடலை -கதிரிலெப்பாக்ஸி-1812, பிஎஸ்ஆர்-2, உளுந்து வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10 ஆகிய சான்று விதைகள் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடன் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது.
    • இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது. இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    2 கட்டம்

    முதல் கட்ட விண்ணப்ப பதிவு வருகிற 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது . 2-ம் கட்டமாக 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வினியோகம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதை தொடர்ந்து ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்ப தலைவிகள் அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வழங்க வேண்டும். மகளிர் உரிமை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க மாவட்டத்தில் 10 துணைப்பதிவாளர்கள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஆய்வு

    இதற்கிடையே டோக்கன் வழங்கும் பணியை முதல் கட்டமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கன்னங்குறிச்சியில் இன்று காலை ஆய்வு செய் தார். அப்போது டோக்கன் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இம்மாதம் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். 2-ம்கட்ட முகாம் ஆக.5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.

    நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக 611 முகாம்களுக்கும், 2-ம் கட்டமாக 303 முகாம்களுக்கும் என மொத்தம் 914 முகாம்களுக்கு பொறுப்பு அலுவலர்களும், 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கு 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள 4,800-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    முகாமில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது.

    இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் பார்வையிட்டனர்.

    • பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பபடிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வந்தி ருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள 215 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் தினமும் காலை 40 பேருக்கும், மாலை 40 பேருக்கும் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.

    இதேபோல் தோவாளை தாலுகாவில் 59 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கல்குளம் தாலுகாவில் 126 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் இன்று 400 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்ட பொது மக்கள் அந்த விண்ணப்ப படிவங்களை முகாம் நடை பெறும் அன்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் பகுதியில் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும் தன்னார் வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவார்கள்.

    எனவே பொதுமக்கள் முகாம் நடைபெறும் அன்று விண்ணப்ப படிவங்களை அதற்கான ஆவணங்களுடன் அந்த இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் மகளிர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் கள் வழங்கப்பட்டது.

    2-வது கட்டமாக முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு அடுத்த கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
    • குடும்பங்களுக்கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

    இந்த கிராமங்களில் குடும்ப அட்டை வைத்துள்ள, தென்னை மரம் இல்லாத அனைத்து குடும்பங்களுக் கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.

    ×