search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
    X

    ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது
    • முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது

    ஈரோடு,

    பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க ப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர்.

    சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி னார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு கொல்லம்பாளை யம் வண்டிக்காரன் பேட்டை பகுதியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்கன்வாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்ட முதல்- அமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடி கரும்பு, ரூபாய் ஆயிரம் கார்டுதா ரர்களுக்கு வழங்க உத்தர விட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலை கடைகளும் 319 பகுதிநேர கடைகள் உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்க ப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பி ற்காக தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது. அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாது காப்பாக பரிசுத்தொகை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் கணேசமூர்த்தி எம்.பி, மேயர் நகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்று வரு கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×