search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகங்கள்"

    • மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
    • போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.

    இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.

    இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

    இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.
    • படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6ஆம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.

    வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

    காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் புத்தக திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புத்தக படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனியாக ஒரு அரங்கம் ஏற்படுத்த கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

    இந்த அரங்கம் தஞ்சை மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்படும்.

    இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
    • மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • பல்லடம் வட்டாரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில், 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், உள்ளிட்ட 5 புத்தகங்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 12-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
    • ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் சீருடைகள் வாங்கும் பணியில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் குழந்தைகளுடன் கோவையில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கூட்டம் அலை மோதி வருகிறது.

    கோவை கடைவீதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட் டில்கள், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக் ஆகியவை விற்பனைக்கு தயாராக உள்ளன. அடுத்தபடியாக வணிக வளாகங்களில் மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் விதம்விதமான ரகம், தினுசுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கு சோட்டாபீம், ஸ்பைடர்மேன், ஆங்கி ரிபேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட் டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு ரகம்-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் ஸ்கூல்பேக் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது. எனவே நடுத்தர குடும் பத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் ஸ்கூல் பேக்குகளை ரூ.300 முதல் ரூ.600 வரை மலிவான விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    இன்னொருபுறம் ஜவுளிக்கடைகளிலும் சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கோவையின் அனைத்து பள்ளிகளுக்கு மான சீருடை துணிகள் பல்வேறு நிறம்-டிசைன்க ளில் விற்பனைக்கு வைக்கப் பட்டு உள்ளன.

    அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கான சீருடைகளை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. அடுத்தபடியாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தையல் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    இங்கு உள்ள டெய்லர்கள் மாணவர்களுக்கு சரியாக அளவெடுத்து சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை கடைவீதியில் உள்ள சாலையோரங்களில் ஸ்கூல் பேக் விற்கும் வியாபாரிகள் கூறியதாவது:-

    பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்க இருப்பதால் ஸ்கூல் பேக் விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை புத்தகப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களில் ஒரு சிலர் ஆன்லைன் மூலம் ஸ்கூல் பேக்குகளை வாங்கு கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் ஓரளவு பாதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பெரும்பா லானோர் புத்தகப்பை வாங்குவதற்காக கடை வீதிக்கு வருவதால், இங்கு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
    • பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    கோவை:

    கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.

    கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

    • போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.
    • இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்திருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடந்தது. இதில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். திறப்பு விழாவில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தங்கவேலு, புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பரிசு கிடைக்கவில்லை என்றாலும் மாணவர்கள் சோர்வடைய தேவையில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் புனித ஜோசப் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதனை கலெக்டர் வினீத் தலைமையில், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கான்ஸ்ட ன்டைன் ரவீந்திரன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-

    தலை நிமிரும் தமிழகம் என்றலட்சியத்தை தமிழகக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.பேச்சுப் போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான். போட்டியில் கலந்து கொண்டு பரிசு கிடைக்கவில்லை என்றாலும்மாணவர்கள் சோர்வடைய தேவையி ல்லை. எனவே, அனைத்து மாணவர்களும்தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என்பது எனதுவேண்டுகோள். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்நிலையங்களுக்கு சென்றுஅறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள். நல்ல நூல்களை படிக்கும் போது தான்நமக்குரிய சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். பேரறிஞர் அண்ணா நல்லபுத்தகங்கள் தான் நல்ல நண்பன் என்பார்கள். அந்தளவிற்கு மாணவர்களாகிய நீங்கள்அ வசியம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

    புத்தகம் வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. மாணவ,மாணவிகள் எந்த தேர்வாக இருந்தாலும் சரி அல்லது இது போன்ற போட்டியாகஇருந்தாலும் சரி வாய்ப்பை இழக்கும் பொழுது சோர்வடைந்து விடாமல் எந்தசூழ்நிலைக்கும் ஆட்படாமல் இலட்சியத்தை அடையும் வரையிலும் முயற்சி செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியுடன் நீங்கள் போட்டி தேர்வை எதிர் கொண்டுவாழ்வில் மேன்மையடைய வாழ்த்துகிறேன் என்றார். மாநில சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்ததாவது:-

    இந்திய மொழிகளில் 114நாடுகளில் தமிழ்மொழி பேச்சு மொழியாக இருக்கிறது. மாணவர்கள் ஆகிய உங்களுக்குகொடுக்கப்பட்ட தலைப்புகளில் மற்றவர்கள் சிந்தித்து பார்கின்ற அளவிற்குஉங்களுடைய பேச்சுக்கள் இருக்க வேண்டும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ் பற்றுடன் இருத்தல் வேண்டும். மாணவர்கள் பேச்சுப்போட்டிகளில் சிறந்து விளங்கவேண்டும் என்றால் அதிகளவில் நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை யெல்லாம்சேகரித்து படிக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், துணை மேயர் பாலசுப்பிரமணியன் , திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், 3-ம் மண்டலத்த லைவர்கோவி ந்தசாமி, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி செயலர் குழந்தைதெரஸ் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மற்றும்கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்
    • இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து, புத்தகத்திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி தொடங்கிய புத்தக திருவிழா நேற்று வரை தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்வை யிட்டதோடு, தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி பயனடைந்துள்ளனர்.

    வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறையில் எண்ணும், எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம், சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் நமது சமுதாயத்தை குறிப்பாக, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும். புத்தகம் வாசிப்பானது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு பெரிய பங்கு வகிப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தகம் வாசிப்பதில் ஊக்குவிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மாணவ-மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மாவட்ட மைய நூலகம் பல்லாயிரக்கணக்கான அறிவுசார்ந்த நூலகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை போல் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் 21 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 109 கிராமபுற நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    தற்போதைய தொழில்நுட்பவியல் காலத்தில் மாவட்ட மைய நூலகங்கள் டிஜிட்டல் மையமாக மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட மைய நூலகம் முழுமை யாக கணினி மயமாக்கப்பட் டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இளைய தலை முறையினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசினையும், வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சிறந்த படைப்பாளிகள் மற்றும் நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்புகழேந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, தாசில்தார்கள்ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினை தீர்த்தான் (தோவாளை), தனிவட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கி ழமை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்டஉபகர ணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட ப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் மாண வர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்ப்பட்டது. அப்போது உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், தேசிய மாணவர் படை அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

    ×