என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரிட்டன்"
- கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து நாடாளுமன்ற குழு அச்சம் தெரிவித்துள்ளது.
- அவரசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து, அந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொரோனா முகக்கவசங்கள், கொரோனா தடுப்பு அங்கிக்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டன.
இந்நிலையில் பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள ரூ.38,600 கோடி மதிப்பிலான கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை எரித்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அவசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் செலவீனங்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு, பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரூ.38,600 கோடி தொகையை செலவிட்டு பொருட்களை வாங்கி, அவற்றை வீணாக்குவது குறித்த விசாரணையை நாடாளுமன்ற குழு தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.
பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சமீபத்தில் வெளியுறவு மந்திரி பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, டென்மார்க்கில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார்.
மேலும், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் போது ஒருவர் மட்டும் முகத்தை மறைத்துக்கொண்டு மற்றொறுவருடன் பேசுவது தவறு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெண்கள் புர்கா அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் வங்கிக்கொள்ளையர்கள் போல இருப்பதாகவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் போரிஸ் ஜான்சன் கருத்து கூறியிருந்தார்.
அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்தார். பின்னர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்தது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த போரிஸ் ஜான்சன், புர்கா குறித்த தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ’ புர்கா தொடர்பான எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக உள்ளேன். என் சக நண்பகர்கள் எனது கருத்தில் உள்ள அர்த்தத்தை மிகவும் கவனத்துடன் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது, அவ்வாறு வெளியேறினால் அது நமக்கே பாதகமாக முடியும் என்ற எனது வலுவான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதற்கு எதிர்வினையாக புர்கா விவகாரத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை தவறாக சித்தரித்து மக்களிடையே கோபத்தை அதிகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என அவர் தெரிவித்தார். #BorisJohnson #TheresaMay #ConservativeParty
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்