search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ்"

    • எரிமலையின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் அதற்கு சிறப்பு
    • எரிமலை குமிழ் மீது இதனை கட்டமைத்திருக்கிறார்கள்.

    பிரான்சின் `எகில்ல' என்னும் இடத்தில் அமைந்துள்ள தேவாலயம் தனித்துவமிக்கது. அது எரிமலையின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் அதற்கு காரணம். கி.பி 969-ம் ஆண்டு செயலிழந்த நிலையில் இருந்த எரிமலை குமிழ் மீது இதனை கட்டமைத்திருக்கிறார்கள். இதன் உயரம் 85 மீட்டர்கள் (279 அடி). எரிமலையின் மேற்பரப்பு 57 மீட்டர் (187 அடி) விட்டம் கொண்டது.

    இந்த தேவாலயத்திற்கு பாறை வழியாகத்தான் சென்றடைய வேண்டும். அதற்காக 268 படிக்கட்டுகள் பாறை மீது பிரத்யேகமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டுமானத்தை பிஷப் கோடெஸ்கால்க் தொடங்கி வைத்தார். இவர் கி.பி 951-ம் ஆண்டு புனித யாத்திரை முடித்து திரும்பியதை கொண்டாடுவதற்காக தேவாலயத்தை கட்டினார். பாறை படிகளில் ஏறும்போது களைப்படைந்தால், இடை இடையே ஓய்வெடுப்பதற்கான இடங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    தேவாலயத்தின் நுழைவாயிலில் கிறிஸ்து, கன்னி மேரி, செயின்ட் மைக்கேல், செயின்ட் ஜான் மற்றும் செயின்ட் பீட்டர் ஆகியோரின் உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறம் பல ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டின்போது, இந்த தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, தேவாலயம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது. 1275-ம் ஆண்டு மணி கோபுரம் இடிந்து விழுந்தது. அது 19-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது. ஓவியங்கள் மீது மீண்டும் வர்ணம் பூசப்பட்டன.

    1955-ம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தேவாலயத்தை ஆராய்ச்சி செய்தபோது பலி பீடத்தில் புனிதமான பொருட்களின் புதையல் ஒன்றை கண்டுபிடித்தனர். உலோக சிலுவை, 11-ம் நூற்றாண்டின் மர சிலுவை உட்பட புனித கலைப்பொருட்களின் தொகுப்புகள் அதில் இருந்தன. அவை இப்போது சுவரில் இரும்பு கூண்டுக்கு பின்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை மீது அழகுற காட்சி அளிக்கும் இந்த தேவாலயம் உலகம் முழுவதும் இருந்து பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

    • 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14ம் தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை மறுதினம் பிரான்ஸ் செல்கிறார். அப்போது இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்புப்படைகளால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடி பயணத்தின்போது அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அங்கு, அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். 2022ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஜெர்மெனியில் நடந்த ஐி7 உச்சி மாநாட்டில் இருந்து திரும்பும் வழியில் பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யானை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது பிரான்ஸ்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.

    எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    • ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளும் பயிற்சியில் ஈடுபட்டன.
    • சுகோய், ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் பங்கேற்பு.

    இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்று வந்தது.

    கருடா-VII என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பிரான்ஸ் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் அம்சங்களுடன் கூடிய போர் விமானம் போன்றவைகள் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும்,மி-17 ரக ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. 


    இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையே தொழில் முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத் திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த பயிற்சி வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பயிற்சியின் போது இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப் போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழலை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன.
    • எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

    பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் எடுத்துரைத்தார். பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின்,  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். 


    பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளதாவது: ஒரு மந்திரியாக இந்தியா வருவது இதுவே முதன்முறை, எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன்.  இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
    • கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாரிஸ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

    இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Paris #AirPollution
    பாரீஸ்:

    ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையில் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், டெலிவரி வாகனங்கள், மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
    ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. #Iran #US
    நியூயார்க்:

    ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.

    இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஈரான்  ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. அதில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்  பெடரிகா மொஜர்னி கூறும்போது,  “ஈரானுடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக செலுத்தப்படும் பணம். ஈரானுடன் சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடருவதற்கு உதவும் பொருளாதார இயக்கநர்களுக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்க சிறப்பு வழி முறைகளை உருவாக்க வேண்டும்" என்றார்.
    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று தொடங்கிய 10-வது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான விளையாட்டு தொடரில் 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். #GayGames #LGBTQ
    பாரீஸ்:

    தன்பால் ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு உண்டாக வேண்டும், அவர்கள் மீதான உளவியல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், 10-வது தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் (GayGames) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். சவுதி, ரஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர்.



    நேற்று நடந்த தொடக்க விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல நாடுகள் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் நடத்தப்பட்டது.
    உலகக்கோப்பை போட்டிக்காக தனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் மாற்றுதிறனாளி மற்றும் ஆதரவற்றோரின் விளையாட்டுக்காக பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே தெரிவித்துள்ளார். #KylianMbappe

    கிலியான் மப்பே என்ற பெயர் உலகம் முழுவதும் தற்போது சென்று சேர்ந்துள்ளது. ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நாக்-அவுட் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக பிரான்ஸ் அணி வீரர் மப்பே இருந்துள்ளார்.

    19 வயதான மப்பே அடித்த இரண்டு கோல்களால் அர்ஜென்டினா அணி வெளியேறியது. இந்த போட்டியை அடுத்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த மப்பே, தற்போது இன்னொரு நெகிழ்வான செயலாலும் அனைவராலும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த உலககோப்பையில் விளையாடுவதால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பிரான்ஸில் உள்ள ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விளையாட்டுக்காக செலவிட உள்ளார்.

    இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.2 கோடியை தொடும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்கள வீரராக இருக்கும் மப்பே, பிஎஸ்ஜி கிளப் அணியிலும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    உலகக்கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி மோத உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #worldcup2018 #LionelMessi #argentinavsfrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால் பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ்-’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோது கின்றன. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் திணறியது. ஐஸ்லாந்துடன் டிரா செய்த அந்த அணி குரோஷியாவிடம் தோற்றது.

    அடுத்து நைஜீரியாவிடம் போராடி வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்சி நட்சத்திர வீரராக உள்ளார். முதல் 2 ஆட்டத்தில் சொபிக்க தவறிய அவர் கடைசி போட்டியில் ஒரு கோல் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார். அவருக்கு ஏஞ்சல்டிமரியா, மார்கஸ் ரோஜோ ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். இதனால் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் அர்ஜென்டினா நுழையுமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஆனால் பிரான்சின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் அடிப்பது கடும் சவாலாக இருக்கும். இதில் மெஸ்சி ஜொலிப்பது மிகவும் அவசியம்.

    முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் பலம் வாய்ந்து இருக்கிறது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க்குடன் டிரா செய்தது. அந்த அணிக்கு 2-வது சுற்றில் இருந்துதான் சவால் ஆரம்பமாகிறது. நட்சத்திர வீரர் கிரிஸ்மான் தனது முழு திறமையை இன்றும் நிரூபிக்கவில்லை. பால்போக்பா, பாப்பே, ஆலிவர் ஜுரூட் நல்ல நிலையில் உள்ளனர். பிரான்ஸ் அணி தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டிலும் சிறப்பாகவே இருக்கிறது.

    இதனால் கால் இறுதிக்குள் நுழையும் வேட்கையுடன் அந்த அணி உள்ளது. முன்னாள் சாம்பியன் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இப்போட்டி குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ன்ஸ் கூறியதாவது-

    அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு எதிராக களத்தில் விளையாடும் போது அவரை தடுக்க பல்வேறு வழிகளை செயல்படுத்த வேண்டும். அவர் ஆட்டத்தில் வித்தியாசத்தை காட்டுவார் என்பதை அறிவோம் என்றார். #worldcup2018 #LionelMessi #argentinavsfrance

    ×