என் மலர்
நீங்கள் தேடியது "Nicolas Sarkozy"
- 2007 தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
- கடந்த மாதம் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, லிபியாவில் இருந்து வந்த நிதியை தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக முன்னாள் அதிபரான நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் சர்கோசிக்கு கடந்த மாதம் தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரீஸில் உள்ள சிறைக்கு இன்று வந்தடைந்தார். அவர் தனது மனைவி, மகன், மகள், பேரண்களுடன் வந்தார். பின்னர், அவர் சிறைக்கு சென்றார். இன்று முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
சிறைக்கு செல்லும் முன்பு, சமூக வலைத்தளத்தில் "நான் ஒரு அப்பாவி மனிதன். சிறையில் அடைக்கப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.
சிறை வாசலில் அவரது ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் நிக்கோலஸ், நிக்கோலஸ் என குரல் எழுப்பியதுடன், பிரான்ஸ் தேசியக் கீதத்தையும் பாடினார்.
இவருக்கு அளித்த தீர்ப்பின்படி, சிறைக்கு சென்ற பின்னரே மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் இரண்டு மாதங்களை வரை பரிசீலனை செய்யலாம். இதனால் சர்கோசி இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வாய்ப்புள்ளது.
விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என சர்கோசி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிரான்சில் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர் சர்கோசி.
- சர்கோசி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோசி. இவர் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர்.
லிபியாவின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபிக்கு ஆதரவாக பேச நிகோலஸ் சர்கோசி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோசியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று பாரீஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.
தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோசி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சர்கோசி கூறுகையில், நான் சிறையில் தூங்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன். தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றார்.






