search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹானர் 8ஏ ப்ரோ"

    ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #US #Iran #India
    வாஷிங்டன்:

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதற்கிடையே, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.



    இந்நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இருப்பினும், அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவே கச்சா எண்ணெய் வாஙக அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #US #Iran #India
    ஆம்பூர் அருகே இரு உடல் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்யை அப்பகுதியினர் திரளாக வந்து பார்த்து சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்தவர் உமாபதி(60), விவசாயி. இவர் தனது வீட்டில் 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று மதியம் ஒரு வெள்ளாடு 2 பெண் குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சாதாரணமாகவும், மற்றொரு குட்டி ஒரு தலையில் இரு உடல்களுடன், எட்டு கால்களுடனும் பிறந்திருந்தது. இதை அறிந்த அப்பகுதியினர் திரளாக வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்த்து சென்றனர்.

    ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது.இறந்த அந்த ஆட்டுக்குட்டியை உமாபதி அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தார்.

    பொதுவாக எட்டு கால்களுடன் பிறக்கும் ஆட்டுக்குட்டிக்கு உலக அளவில் ஆக்டா கோட் என்ற பெயரில் அழைக்கப்படுவது வழக்கம்.

    கடந்த 2014ம் ஆண்டு குரோஷியா நாட்டில் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவின.

    இத்தகைய ஆட்டுக்குட்டிகள் பிறந்து ஒருவாரம் வரை உயிர் வாழ்ந்து விட்டால் பின்னர் தங்களது வாழ்நாளை எளிதாக கழித்து விடும் என்றனர்.

    சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. #galaxys8



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.64,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அதன்பின் ரூ.58,900 மற்றும் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.53,990 என விலை மாற்றியமைக்கப்பட்டது.

    இருமுறை விலை குறைக்கப்பட்ட நிலையில், கேலக்ஸி எஸ்8 பிளஸ் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூ.12,000 வரை விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ரூ.39,990 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, சமீபத்தில் கேலக்ஸி நோட் 9 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நி்லையில், புதிய விலை குறைப்பு மூலம் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் 128ஜிபி வேரியன்ட் விற்பனை குறைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் இவற்றின் விலை குறைக்கப்படவில்லை.

    கேலக்ஸி எஸ்8 பிளஸ் புதிய விலையில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள், சாம்சங் ஷாப் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலை மாற்றப்படும் என தெரிகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி கேலக்ஸி எஸ்8 பிளஸ் வாங்குவோருக்கு பேடிஎம் சார்பில் ரூ.8,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    இத்துடன் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 நானேமீட்டர் என்ற அளவில் உலகின் மிகவும் மெல்லிய பிராசஸர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மெமரியை பொருத்த வரை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும், 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    அரூர் அருகே சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். #anbumani
    அரூர்:

    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்படத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    பின்னர் அவர் பேசியதாவது, இப்பகுதி மக்களின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என பேசினார். மேலும் அப்பகுதி மக்கள் இம்மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும், மேலும் செல்போன் டவர் இல்லாததால் சில கிராமங்களில் போன் வசதி பெற இயலாமல் உள்ளது எனவே செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

    செல்போன் டவர் அமைப்பது குறித்து ஏற்கனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேலம் சென்னை 8 வழி சாலையால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.இதனால் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ஏற்கனவே 3 தேசிய சாலைகளும் விமான, ரயில் வசதியும் உள்ளது. இதையெல்லாம் விடுத்து புதியதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். 

    விழாவில் கோட்டாட்சியர் புண்ணியகோடி, மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் இமயவர்மன், உள்பட பலர் கலந்து கொண்டனர். #anbumani
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #GalaxyA8Star


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8 ஸ்டார் என அழைக்கப்படுகிறது.

    6.28 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஸ்மார்ட் பியூட்டி, ப்ரோ லைட்டிங் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    அனைத்து வித வெளிச்சங்களுக்கும் ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் என்பதால் புதிய டூயல் கேமரா அமைப்பை இன்டெலிகேம் என சாம்சங் அழைக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - சாம்சங் பே
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில், இதன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஆகஸ்டு 27-ம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

    இத்திட்டத்திற்காக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், பாசன கிணறுகள், வீடுகள், வனப்பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும், நீதியின் மீதான நம்பிக்கையையும், தற்காலிக நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    8 வழிச் சாலை பிரச்சனைக்காக இதுவரை போலீசார் என்னை 3 முறை கைது செய்துள்ளனர். நிலத்தை நம்பிதான் குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். 3 ஏக்கர் நிலத்தில் 8 வழி சாலைக்காக கல் பதிக்க வந்தபோது, அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதேன். ஆனாலும், போலீசை வைத்து மிரட்டி என்னுடைய நிலத்தை அளந்து, கற்கள் நட்டனர்.

    இந்த நிலத்தையும், பம்பு செட்டையும் நம்பி தான் வாழ்கிறோம். இந்த நிலத்தை ரோடு போட எடுத்துக்கொண்டால், நாங்கள் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை. கோர்ட் தீர்ப்பு கேட்டு அழுதே விட்டேன். செத்து பிழைத்தது போல இருக்கிறது.

    எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்து இந்த நிலத்தை நம்பியே இருந்திருக்கிறோம். எங்களுடைய 4 ஏக்கர் நிலத்தையும், பம்புசெட் கிணற்றையும் அளந்து, கற்கள் நட்டபோது, உயிரே போய்விடும் போல இருந்தது.

    இந்த நிலம் இருந்தால், நாங்கள் மட்டுமா பிழைப்போம். எல்லோருக்கும் சோறு இந்த நிலத்தில் இருந்துதானே கிடைக்கிறது. இதை அழிக்கலாமா என கண்ணீர் விட்டோம். இப்போது, கோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

    8 வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இந்த தடையை நீக்க அரசு மேல்முறையீடு செய்ய முயற்சிக்கலாம்.

    எனவே, விவசாயிகளின் வேதனையை உணர்ந்து, நிரந்தரமாக தடை விதித்து கோர்ட் நீதி வழங்கும் என நம்பியிருக்கிறோம் என்றனர்.
    கணியம்பாடி அருகே மர்ம நபர்கள் கல்வீசி 8 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர்.

    கண்ணமங்கலம்:

    வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நேற்று இரவு 9.30 மணி அளவில் கணியம்பாடி மலை கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் பஸ்கள் மீது கற்களை வீசினர். இந்த தாக்குதல் மலை கணவாய் முதல் கொங்கராம்பட்டு பகுதி வரை சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது நடத்தப்பட்டது. இதில் ஒரு ஆம்னி பஸ் உள்பட 7 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. 

    கல்வீசியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே பஸ்களை சாலையிலேயே டிரைவர்கள் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கண்ணமங்கலம், வேலூர் தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணம் செய்ய அச்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதேபோல, கீழ்பள்ளிப்பட்டு அருகே புதுப்பேட்டை பகுதியிலும் ஒரு அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். அந்த பஸ் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- 8 பஸ்களின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் செங்கல்களை பஸ்கள் மீது வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமில்லை.

    குடிபோதையில் பஸ்களின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனினும் இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. 2 பேரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    அல்பேனியாவில் குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரி சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    டிரானா:

    ஐரோப்பாவின் பால்கன் தீவுகளில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. இந்த நாட்டின் தலைநகராக விளங்குவது டிரானா.

    டிரானா நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் ரித்வான் சைகாஜ் (24).

    இவர் நேற்று தனது வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

    இந்த கொலைகள் தொடர்பான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்றது அல்பேனியாவில் சோகத்தை ஏற்படுத்தியது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. #samsunggalaxy #Smartphones
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. கேலக்ஸி ஜெ2 கோர் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாகவும், கேலக்ஸி ஏ8 ஸ்டார் மாடல் ஒன்றாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே SM-J260 மற்றும் SM-G8850 என்ற மாடல் நம்பர்களுடன் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் மற்ற ஆன்ட்ராய்டு கோ சாதனங்கள் போன்று இல்லாமல், புதிய சாதனம் டச்விஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.


    சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சிறப்பம்சங்கள்:

    கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதன்படி கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ், 220x1080 பிக்சல் இன்ஃபைனைட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7885 அல்லது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 4ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 16 எம்பி + 24 எம்பி டூயல் கேமரா செட்டப், டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். #samsunggalaxy #Smartphones
    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் காட்பாடி அருகே லாரி மீது கல்வீசி தாக்கியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் சித்தூரில் இருந்து காட்பாடி வழியாக கள்ளக்குறிச்சிக்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரியை ஓட்டிச்சென்றார்.

    காட்பாடியில் வந்தபோது 8 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் லாரி வேலைநிறுத்தத்தின்போது ஏன் லாரி ஓட்டுகிறாய் என்று கூறி லாரி மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிமீது கல்வீசி தாக்கியதாக செங்குட்டையை சேர்ந்த மணிகண்டன் (24), மற்றொரு மணிகண்டன் (31), காட்பாடி ராஜி, தொரப்பாடி மணிகண்டன், கழிஞ்சூர் பெருமாள், கொசப்பேட்டை ஞானபிரகாஷ், காட்பாடியை சேர்ந்த கார்த்தி, தோட்டப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டையை அடுத்த சேர்க்காடு அருகே சென்னை - சித்தூர் சாலையில் சில லாரிகள் சென்று கொண்டிருந்தன.

    இதைக்கண்ட அந்த பகுதியில் இருந்த சிலர் மோட்டார்சைக்கிள்களில் விரைந்து சென்று அந்த லாரிகளை முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தி சிறைபிடித்தனர். லாரிகளை ஓட்டி வந்தவர்களிடம் வேலை நிறுத்தத்தில் இருக்கும் போது லாரிகளை ஓட்டக்கூடாது எனக்கூறி அந்த லாரிகளை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரவர்மன் மற்றும் போலீசார் லாரிகளை மடக்கியவர்களிடம் ஏன் லாரிகளை சிறை பிடிக்கிறீர்கள்? லாரிகளை நிறுத்துவது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன. பின்னர் லாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. #tamilnews
    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு பொதுமக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #chennaisalemgreenway

    கோவில்பட்டி:

    தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல விவசாயிகள் மாநாடு கோவில்பட்டி மந்தித்தோப்பில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

    மாநாட்டில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதல் லாபம் பெற வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி இத்திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், விவசாயிகளின் நகைக்கடன் உள்பட அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கிய நிறுவனத்தில் சோதனை தான் நடைபெற்றுள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்டதாக அர்த்தமில்லை, இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது நடைபெற்ற டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை, என்ன நடைமுறை பின்பற்றபடுமோ, அது பின்னபற்றபடுவதாக அந்த துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு 90 சதவீத மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிலம் எடுப்பு முறையாக நடைபெற்றுள்ளது. மக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வும் இந்த சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, நிலஎடுப்பு முறையாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemgreenway

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்காக 42 கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நாளை தொடங்குகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. 40 ஆயிரம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. 8 மலைகளும் உடைக்கப்படுகின்றன.

    8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதுவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அளவீடு செய்யும் பணிகள் முடிந்துள்ளன.

    நில அளவீட்டை பொறுத்தவரை 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி நாளை தொடங்குகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாம்பரத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த சாலை ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக சென்று மாவட்ட எல்லையான பெருநகர் வழியே திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம் அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்குகின்றன. வருவாய்த்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்வதற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி விட்டது. உத்திரமேரூர், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    4 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் நிலத்தின் மத்தியில் 8 வழிச்சாலை அமைகிறது. எனவே அந்த விவசாயிக்கு ரோட்டின் இருபுறமும் துண்டு துண்டாக விவசாய நிலம் மீதமாகிறது. இந்த 2 நிலத்திலும் விவசாயம் செய்ய சுமார் 10 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நிலம் அளவீடு செய்வதை எதிர்த்து ஏராளமான விவசாயிகள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மனு கொடுத்தும் வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர் பொன்னையா, “உங்களிடம் கருத்து கேட்டு உங்கள் சம்மதத்தை பெற்றுத் தான் நிலத்தை கையகப்படுத்துவோம் என்று கூறி வருகிறார்.

    ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபடியே உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளும் கடந்த 6-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் அளவீடு செய்யும் பணியை தடுக்க எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என்பது தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கலாம் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    எனவே போராட்டத்தை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில அளவீடு பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தொடங்குகிறார்கள். ஆனாலும் அதையும் சந்தித்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அளவீடு செய்த நிலத்தில் கல் பதிக்கும் பணி முடிந்து விட்டது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 22 கிராமங்களில் 54 கி.மீ. தூரத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் 2 கி.மீ. தூரத்துக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 கிராமங்களில் 122 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 59 கி.மீ. தொலைவுக்கும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    தர்மபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 74 கிராமங்களில் 7237 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 1300 ஏக்கர் அளவுக்கு தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    8 வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாய நிலங்களில் பெண்கள் உருண்டு புரண்டு அழுதனர். காலம் காலமாக உழைத்து பாதுகாத்த நிலம் பறி போகிறதே என்று பெண்கள் கண்ணீர் வடித்தனர்.

    எதிர்ப்பு கிளம்பிய கிராமங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். பல கிராமங்களில் நில அளவீடு பணியின்போது ரே‌ஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகள் முன்பு வீசி எறிந்தும் பொது மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சிலர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.

    கடந்த 6-ந்தேதி 5 மாவட்ட தலைநகரங்களில் 8 வழி பசுமை சாலைக்கான அரசாணையை எரித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி கைதானார்கள். #Greenexpressway
    ×