search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடியில் லாரி மீது கல்வீசி தாக்கிய 8 பேர் கைது
    X

    காட்பாடியில் லாரி மீது கல்வீசி தாக்கிய 8 பேர் கைது

    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் காட்பாடி அருகே லாரி மீது கல்வீசி தாக்கியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் சித்தூரில் இருந்து காட்பாடி வழியாக கள்ளக்குறிச்சிக்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரியை ஓட்டிச்சென்றார்.

    காட்பாடியில் வந்தபோது 8 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் லாரி வேலைநிறுத்தத்தின்போது ஏன் லாரி ஓட்டுகிறாய் என்று கூறி லாரி மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிமீது கல்வீசி தாக்கியதாக செங்குட்டையை சேர்ந்த மணிகண்டன் (24), மற்றொரு மணிகண்டன் (31), காட்பாடி ராஜி, தொரப்பாடி மணிகண்டன், கழிஞ்சூர் பெருமாள், கொசப்பேட்டை ஞானபிரகாஷ், காட்பாடியை சேர்ந்த கார்த்தி, தோட்டப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டையை அடுத்த சேர்க்காடு அருகே சென்னை - சித்தூர் சாலையில் சில லாரிகள் சென்று கொண்டிருந்தன.

    இதைக்கண்ட அந்த பகுதியில் இருந்த சிலர் மோட்டார்சைக்கிள்களில் விரைந்து சென்று அந்த லாரிகளை முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தி சிறைபிடித்தனர். லாரிகளை ஓட்டி வந்தவர்களிடம் வேலை நிறுத்தத்தில் இருக்கும் போது லாரிகளை ஓட்டக்கூடாது எனக்கூறி அந்த லாரிகளை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரவர்மன் மற்றும் போலீசார் லாரிகளை மடக்கியவர்களிடம் ஏன் லாரிகளை சிறை பிடிக்கிறீர்கள்? லாரிகளை நிறுத்துவது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன. பின்னர் லாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. #tamilnews
    Next Story
    ×