search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 way road"

    8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியபோது எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருந்தது ஏன்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும். அ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

    மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

    8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.

    ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari 

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்துவோம் என அன்புமணி கூறியுள்ளார். #anbumani #chennaisalemexpressway #tngovt
    தர்மபுரி:

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து இன்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை வேண்டாம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே கூறி இருக்கின்றோம். கூட்டணி சேர்ந்தோம் என்பதற்காக எங்களது கொள்கைகளை விட்டுவிட முடியாது. சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கின்றோம்.

    இன்னும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி இதை விட்டுவிடுங்கள்; இதற்கு மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று வலியுறுத்தி நிச்சயம் அழுத்தம் கொடுப்போம். தேர்தலுக்கும், 8 வழிச்சாலைக்கும் சம்பந்தம் கிடையாது. இது என் கடமை. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என் உரிமை. 

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalemexpressway #tngovt
    நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நெல்லை: 

    நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் அசோக் தலைமை தாங்கினார். 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் பிரசார பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை கைது செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறும் போது, “சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்காக கருத்து கேட்பு முறையாக நடத்தப்படவில்லை. இந்த திட்டத்துக்கு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த திட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரசார பயணம் மேற்கொண்ட எங்கள் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்“ என்றார்.

    தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், கட்சி நிர்வாகிகள் சுடலைராஜ், விண்ணமுத்து, பேரின்பராஜ், முருகன், கவுதம், பாலு, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். #salemtochennaigreenexpressway

    திண்டுக்கல்:

    சேலம்- சென்னையிடையே 8 வழிச்சாலை அமைக்க பல்வேறு மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று திருவண்ணாமலையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். வெளியே அனுப்பினாலும் மீண்டும் நடைபயணம் தொடரும் என அறிவித்துள்ளதால் போலீசார் அவர்களை விடுவிக்காமல் உள்ளனர்.

    இதனை கண்டித்தும் விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

    திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அமைச்சர் சீனிவாசனின் அலுவலகம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அப்போது நடைபயணம் மேற்கொண்டவர்களை விடுவிக்க வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு எதிராக அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். #salemtochennaigreenexpressway

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு பொதுமக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #chennaisalemgreenway

    கோவில்பட்டி:

    தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல விவசாயிகள் மாநாடு கோவில்பட்டி மந்தித்தோப்பில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

    மாநாட்டில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதல் லாபம் பெற வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி இத்திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், விவசாயிகளின் நகைக்கடன் உள்பட அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கிய நிறுவனத்தில் சோதனை தான் நடைபெற்றுள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்டதாக அர்த்தமில்லை, இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது நடைபெற்ற டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை, என்ன நடைமுறை பின்பற்றபடுமோ, அது பின்னபற்றபடுவதாக அந்த துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு 90 சதவீத மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிலம் எடுப்பு முறையாக நடைபெற்றுள்ளது. மக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வும் இந்த சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, நிலஎடுப்பு முறையாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemgreenway

    ×