search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளங்கோ
    X
    இளங்கோ

    8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் - விவசாயிகள் குமுறல்

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

    இத்திட்டத்திற்காக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், பாசன கிணறுகள், வீடுகள், வனப்பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும், நீதியின் மீதான நம்பிக்கையையும், தற்காலிக நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    8 வழிச் சாலை பிரச்சனைக்காக இதுவரை போலீசார் என்னை 3 முறை கைது செய்துள்ளனர். நிலத்தை நம்பிதான் குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். 3 ஏக்கர் நிலத்தில் 8 வழி சாலைக்காக கல் பதிக்க வந்தபோது, அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதேன். ஆனாலும், போலீசை வைத்து மிரட்டி என்னுடைய நிலத்தை அளந்து, கற்கள் நட்டனர்.

    இந்த நிலத்தையும், பம்பு செட்டையும் நம்பி தான் வாழ்கிறோம். இந்த நிலத்தை ரோடு போட எடுத்துக்கொண்டால், நாங்கள் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை. கோர்ட் தீர்ப்பு கேட்டு அழுதே விட்டேன். செத்து பிழைத்தது போல இருக்கிறது.

    எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்து இந்த நிலத்தை நம்பியே இருந்திருக்கிறோம். எங்களுடைய 4 ஏக்கர் நிலத்தையும், பம்புசெட் கிணற்றையும் அளந்து, கற்கள் நட்டபோது, உயிரே போய்விடும் போல இருந்தது.

    இந்த நிலம் இருந்தால், நாங்கள் மட்டுமா பிழைப்போம். எல்லோருக்கும் சோறு இந்த நிலத்தில் இருந்துதானே கிடைக்கிறது. இதை அழிக்கலாமா என கண்ணீர் விட்டோம். இப்போது, கோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

    8 வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இந்த தடையை நீக்க அரசு மேல்முறையீடு செய்ய முயற்சிக்கலாம்.

    எனவே, விவசாயிகளின் வேதனையை உணர்ந்து, நிரந்தரமாக தடை விதித்து கோர்ட் நீதி வழங்கும் என நம்பியிருக்கிறோம் என்றனர்.
    Next Story
    ×