search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் விபத்து"

    • பாலத்தை உடைத்துகொண்டு பஸ் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொழும்பு:

    இலங்கை பொலன்ணறுவு கதுருவெலாவில் இருந்து ஒரு தனியார் பஸ் காத்தான் குடிக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் குழந்தைகள் உள்பட 70 பேர் பயணம் செய்தனர்.

    வழியில் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்குள்ள பாலத்தை உடைத்துகொண்டு பஸ் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மரண பயத்தில் அலறினார்கள்.

    இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுக்குள் விழுந்த பஸ் பல மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர்.
    • பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே பஸ் மோதிய விபத்தில் சென்னை கார் கம்பெனி ஊழியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இன்று காலை ஊருக்கு வந்திருந்த ஈஸ்வரன் அவரது மனைவி சங்கீதா ( 28) மற்றும் மகன் தஸ்வந்த் (2) ஆகியோருடன் பைக்கில் ஆற்காடு நோக்கி சென்றார். கலவை ரோட்டில் உள்ள கடப்பந்தாங்கல் என்ற இடத்தில் வந்த போது வந்தவாசியில் இருந்து வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆற்காடு தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். விபத்து ஏற்பத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடல்களை எடுத்து செல்ல விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தை தவித்து வருகிறது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விபத்து நடந்ததும் பஸ்டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், லிப்ட் கேட் பகுதியை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் அமீதுதீன் (வயது 12). இவன் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு மாணவன் அமீதுதீன், எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் எதிர்பாராத விதமாக அமீதுதீன் மீது மோதியது. இதில் அவன் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினான்.

    உடனடியாக அவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்ததும் பஸ்டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகிறார்.

    • கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
    • 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கடலூர் நோக்கி நேற்று காலை 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. இதேபோல கடலூரில் இருந்து மற்றொரு தனியார் பஸ் பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் வேலை செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் பஸ்களில் சென்றனர்.

    இதில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பஸ்களில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மற்றொருவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும், 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிக்சைக்காக புதுவை ஜிப்மர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த துரை (68) சிகிச்சை பலனின்றி இன்று நண்பகலில் இறந்தார். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பஸ் டிரைவர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
    • பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி:

    கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போல திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    இதில் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த பஸ் மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்தது. அப்போது பஸ் முன்பக்கத்தில் டிரைவர் சீட்டிற்கு கீழே இருந்த டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சின் டிரைவர் இதனை கவனித்தார். தாறுமாறாக வரும் பஸ் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்பதை கணித்து, பஸ்சை சாலையின் ஓரமாக இயக்கி மெதுவாக சென்றார்.

    இருந்தபோதும் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பஸ், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தின் போது, இடி இடித்தது போல் பலத்த சத்தம் எழுந்தது. இதில் 2 தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    விபத்தில் 2 பஸ்சின் முன்பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்கு இடையே பயணிகளும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    2 பஸ்களிலும் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. மேலும், பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவரை மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், கிரேன், பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

    இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.

    காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே ரோட்டில் விழுந்து கவிழ்ந்தது.
    • விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிட்டா என்ற இடத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது.

    ஒரு வளைவில் அந்த பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே ரோட்டில் விழுந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சுக்குள் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சுக்கு அடியில் சிலர் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்தது. விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
    • ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு கொல்கத்தாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென்று விபத்தில் சிக்கியது.

    கொல்கத்தாவில் உள்ள மேதினிபூருக்கு சென்ற அந்த பஸ் மதியம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.

    கர்கோன் மாவட்டத்தின் டோங்கர்கான் பகுதியில் உள்ள போரட் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வறண்டுபோன போரட் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்து குறித்த தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர். 3 சிறுவர்கள் உள்பட 23 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளர்.

    இதுதொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்கோனில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று நடைபெறும் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு டிரைவர், வழிக்காட்டுனருடன் 49 பேர் பஸ்சில் திருச்சூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். மொத்தம் 51 பேர் பஸ்சில் இருந்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.

    பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவறாக பஸ்சில் இருந்து வெளியே மீட்டனர்.

    இந்த விபத்தில் திருச்சூரை சேர்ந்த வர்க்கீஸ் மனைவி லில்லி (வயது 63), ஜோசப் மகன் ராயன் (9) ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலருக்கு கை, கால் துண்டானது. விபத்துக்குள்ளான பஸ்சும் சேதமடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மற்றும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம லம். பஸ் டிரைவர். இவரது மகன் தினகரன் (வயது 17), ஆற் காட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார்.

    நேற்று காலை ஆரணியில் இருந்து விளாப்பாக்கம் வழியாக ஆற்காடு நோக்கி வரும் அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங் கியபடி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

    விளாப்பாக்கத்தை அடுத்த உப்புப்பேட்டை அருகே வரும் போது பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறியதில் காலில் உள்ள கட்டை விரல் நசுங்கி உள்ளது.

    உடனே பஸ் நிறுத்தப்பட்டு தினகரனை பயணிகள் மீட்டனர். உடனடியாக தினகரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்.
    • பிரியங்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா. 22 வயதான இவர் கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷி நாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இருவரும் ஓட்டலில் சாப்பிடுவதற்கு சென்றனர். ராயப்பேட்டை மேம்பாலத்தில் சென்ற போது ரிஷிநாதன் முன்னால் சென்ற மாநகர பஸ்சை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் வந்த கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரியங்கா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிரியங்கா உடல் நசுங்கினார். பஸ் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள். இந்த விபத்தில் ரிஷிநாதன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி,பிப்.2-

    திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.

    ×