search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காடு அருகே பஸ் மோதி சென்னை கார் கம்பெனி ஊழியர்-மனைவி பலி
    X

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    ஆற்காடு அருகே பஸ் மோதி சென்னை கார் கம்பெனி ஊழியர்-மனைவி பலி

    • விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர்.
    • பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே பஸ் மோதிய விபத்தில் சென்னை கார் கம்பெனி ஊழியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இன்று காலை ஊருக்கு வந்திருந்த ஈஸ்வரன் அவரது மனைவி சங்கீதா ( 28) மற்றும் மகன் தஸ்வந்த் (2) ஆகியோருடன் பைக்கில் ஆற்காடு நோக்கி சென்றார். கலவை ரோட்டில் உள்ள கடப்பந்தாங்கல் என்ற இடத்தில் வந்த போது வந்தவாசியில் இருந்து வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆற்காடு தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். விபத்து ஏற்பத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடல்களை எடுத்து செல்ல விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தை தவித்து வருகிறது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×