search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எர்ணாவூரில் மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    எர்ணாவூரில் மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலி

    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விபத்து நடந்ததும் பஸ்டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், லிப்ட் கேட் பகுதியை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் அமீதுதீன் (வயது 12). இவன் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு மாணவன் அமீதுதீன், எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் எதிர்பாராத விதமாக அமீதுதீன் மீது மோதியது. இதில் அவன் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினான்.

    உடனடியாக அவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்ததும் பஸ்டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகிறார்.

    Next Story
    ×