search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூலகம்"

    • புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • பேராவூரணி அரசு பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டிடம் கட்டப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ரூபாய்.1 கோடியில் பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி, நவீன நூலகம் உள்ளிட்டவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்,

    சொர்ணக்காடு ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூ.21.45 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு கொறடா கோவி.செழியன் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் நூலகம் செயல்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    • ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப் பகுதிகளுக்கு நாளை முதல் (2-ந் தேதி) முதல் செல்ல உள்ளன.

    இதன் மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக புத்தகங்கள் படிப்பதற்கும் மேலும் மாணவ, மாணவிகள் பொது அறிவுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், தொழில் துறை தொடர்பான வழிகாட்டி கையேடுகளை படித்து தெரிந்து கொள்ள வும் முடியும்

    பழம்பெருமையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பெண்களின் சுய முன் னேற்றத்திற்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், தேவையான நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும் மற்றும் கவிதை தொகுப்புகள் கவிதை கட்டுரைகள் போன்ற சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இந்த நடமாடும் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் நடமாடும் நூலகம் செல்லும் பகுதிகளில் மாணவ, மாணவிகள் வாகனத்தி லேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள் கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலகம் உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்தவும் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தவும் பயனுள்ள வகையில் ஒவ்வொருவரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
    • ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாதிரி நூலகம் ஒன்றும், இரண்டாம் நிலை கிளை நூலகங்கள் இரண்டும் செயல்பட்டு வருகின்றன.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளத்தில் இரண்டாம் நிலை நூலகமும், கணியூர், கொமரலிங்கம் உட்பட பகுதிகளில் கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தளி ரோட்டில் இருந்த கிளை நூலகம் மட்டும் மாதிரி நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. பிற நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இதனால் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள், அரசு நூலகங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.ஆனால், இரண்டாம் நிலை நூலகங்களில் போதியளவு புத்தகங்கள் இருப்பதில்லை. குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராக தேவையான, கட்டமைப்பு வசதிகள் எந்த நூலகத்திலும் இல்லை. தனியாக இருக்கை வசதி, கூடுதல் புத்தகங்கள், கழிப்பிட வசதியில்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். குடிமைப்பணிகள் தேர்வு பிரிவு அனைத்து கிளை நூலகங்களிலும் துவக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
    • எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

    மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி, கவிஞர் சரஸ்வதி தாயுமானவன், மூத்த வாசகர் யேசுதாஸ் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    நான்கு நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமையில் எட்டு நூலகர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த புத்தகங்களை திறனாய்வு செய்தனர்.

    இரண்டாவது அமர்வில் தமிழ் ஆசிரியர் நமாமலைவாசன் தலைமையில் டிஜிட்டல் மீடியாக்களால் வாசிப்பு அதிகரித்திருக்கிறதா? குறைந்து இருக்கிறதா ? என்ற வாசிப்பு குறித்த பட்டிமன்றம் நூலக வாசகர்களை கொண்டு நடத்தப்பட்டது.

    மூன்றாவது அமர்வாக நூலகர் ஆசைத்தம்பி தலைமையில் கல்வியா ளர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த நூல்களை திறனாய்வு செய்தனர்.

    இறுதி நிகழ்வாக எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நூலகர் அன்பரசு வரவேற்புரை வழங்கினார்.

    கூத்தாநல்லூர் நூலகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ மன்னை தலைவர் நமாமலைவாசன் தலைமை தாங்கினார். தமிழ் பல்கலைகழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசு

    சிறப்புரையாற்றினார். ஜே.சி.ஐ முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    முடிவில் மன்னார்குடி நூலகர் ராஜா நன்றி கூறினார்.

    நிகழ்வில் மன்னார்குடி வட்ட நூல்கள் ஜே.சி.ஐ உறுப்பினர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மன்னார்குடி கூத்தா நல்லூர் கிளை நூலகங்கள் மற்றும் ஜே.சி.ஐ மன்னை ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வாசிப்பின் அவசியம் குறித்து வேலம்மாள் விளக்க உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் வாசிப்பு பற்றிய உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் உலக புத்தக தின விழா மற்றும் தமிழ்நாடு வாசிப்பு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதி மூலம் தலைமை தாங்கி னார்.

    வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற கல்லூரி முதல்வர் வேலம்மாள் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார்.

    எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு, இல்லம் தேடி கல்வி ஒருங்கி ணைப்பாளர் அய்யப்பன், இலஞ்சி டேனியல், கல்லூரி நூலகர் ஏஞ்சலின், பட்டிமன்ற பேச்சாளர் மஹமுதா தசையத், கவிஞர்கள் அய்யப்பன், இளங்குமரன், தங்கராஜ், வக்கீல் கார்த்திக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மைய மாநில துணைத்தலைவர் ராஜா வாசிப்பு பற்றிய உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை விழுதுகள் சேகர் தொகுத்து வழங்கி னார். நூலகர் ராமசாமி நன்றி கூறி னார். விழாவில் வாசகர்கள் 70 பேர் கலந்து கொண்டனர்.

    • ரூ.2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவருக்கு வீடு கட்டும் பணி ஆய்வு.
    • ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணி ஆய்வு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகணி வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், தொடர்ந்து, வள்ளுவக்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியி ருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, கொண்டல் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், கழுமலை ஆறுவாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.14.5 இலட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், ஆதிதிராவிடர் கீழத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கு செயல்படும் ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணியி னையும், ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் கனக.சரவணன்,சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, உடன் இருந்தனர்

    • .நூலகத்தில் அதிவேக பிராட்பேண்ட், இலவச வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளது.
    • வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2 ல்இலவச வைபை திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது.நூலகத்தில் அதி வேக பிராட்பேண்ட், இலவச வை பை வசதி வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ ,மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தங்களுக்கு தேவையான கோப்புகள் ,புத்தகங்கள் போன்றவற்றை இலவச வைபை வசதியை பயன்ப டுத்தி எளிதாக பதிவிறக்கம்செய்து பயனடையலாம் என நூலகர் கலாவதி தெரிவித்தார். மேலும் இணையதளத்தை பயன்படுத்த குறைந்த கட்டணத்தில் மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது .

    மேலும் மாணவ மாணவியர் எளிதாக பயன்படுத்தும் வகையில் புத்தகங்களுக்கு வண்ணத்தாள் ஓட்டப்பட்டு வகுப்பு வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. வைபை வசதி துவக்க நிகழ்ச்சியில் நூலகர் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் போட்டி தேர்வில் பயிற்சி பெறும்மாணவ மாணவிகள்கலந்து கொண்டனர்.

    • மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
    • சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள், மத்திய ஜெயிலுக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை கூடல் புதூர், ரயிலார் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மத்திய ஜெயிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், "நான் மதுரை மத்திய ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்புகிறேன். எனக்கு 92 வயது ஆகிறது. எனவே புத்தகங்களுடன் நேரடியாக ஜெயிலுக்கு வர இயலவில்லை. ஜெயில் அதிகாரிகள் நேரில் வந்து புத்தகத்தை வாங்கி சென்றால், பெரு மகிழ்ச்சி அடைவேன்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.

    முதியவரின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவரிடம் "உங்களை நெகிழ வைத்த மனிதர்கள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-

    சிறைச்சாலைகளில் கைதிகள் படிக்கும் வகையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.

    மதுரையைச் சேர்ந்த 92 வயதான பெரியவர் பாலகிருஷ்ணன் என்பவர், தனது சேகரிப்பில் இருந்து 300 புத்தகங்களை சிறைத்துறைக்கு வழங்கி உள்ளார்.

    வாழ்நாள் எல்லாம் சேகரித்து வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு பகுதியை, சிறை கைதிகளின் நலனுக்காக வழங்கிய அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்த செய்தியை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்ற வேண்டும்.

    நான் மிசா காலத்தில் அரசியல் கைதியாக ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு அங்கு உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல், வரலாற்றைத் தாண்டி நிறைய நாவல்களை படித்து அறிந்தேன். சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்வரின் பாராட்டு குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மத்திய சிறைக்கு 300 புத்தகங்கள் வழங்கியதை கேள்விப்பட்டு, தமிழக முதல்வர் என் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அது எனக்கு மிகவும் பெருமை தருகிறது. இன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அவருக்கு நன்றி சொல்லவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார்.

    • நெற்குப்பை நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் சோ மேலெ நினைவு அரசு கிளை நூலகத்தில் குழந்தை கவிஞர் வள்ளியப்பா நூற்றாண்டு விழா, உங்கள் மாவட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, கலை மற்றும் கல்வி அரங்கம் அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

    நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் புசலான் வரவேற்றார். சோமசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆத்திசூடி ஜெயராமன், மகிபாலன்பட்டி சாத்தப்பசெட்டியார், வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் செயல் அலுவலர் கணேசன், மண்டலதுணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், இளநிலை உதவியாளர் சேரலாதன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், அலமேலு அழகப்பன், அருணாச்சலம், உமா வள்ளியப்பன், தேவி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலக நல்நூலகர் விஜயா நன்றி கூறினார்.

    • ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு.
    • பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், வக்ராநல்லூர் ஊராட்சியில் ரூ.33.04 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் மதியஉணவு சமையல் கூடம் கட்டுப்பட்டு உள்ளதையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரையில் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டு உள்ளதை யும், வக்ராநல்லூர் பகுதியி லுள்ள அங்கான்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்ட சத்து உணவு குறித்தும், ரூ.1.565 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும், நூலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் புத்தகத்தினையும், நூலக வருகைப்பதிவேடு குறித்தும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவி ட்டார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார், ரங்கராஜன், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மத்திய சிறை நூலகத்துக்கு நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்.
    • இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நூலகம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பலர் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெறுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறை டி.ஐ.ஜி. பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரத்யேக ஸ்டால் அமைக்கப்பட்டு புத்தகங்கள் அன்பளிப்பாக பெறப்பட்டன. சிவகங்கை புத்தக கண்காட்சியில் கலெக்டர் உதவியுடன் பொது மக்களின் பங்களிப்பாக 1000 புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் சிறப்பு ஸ்டால்கள் மூலம் புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை கூடல்நகரை சேர்ந்த 92 வயது முதியவர் பாலகிருஷ்ணன் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கினார். ஈரோடு பகுதியைச் சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரை மத்திய ஜெயின் நூலகத்தில் இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க விரும்புவோர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர் மாவட்ட கிளைச்சிறைகளிலும் நேரடியாக கொண்டு வந்துதரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய சிறை நூலகத்துக்கு மதுரை மாவட்ட நீதிபதி ஏ.கே.கே. ரஜினி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வழங்கியுள்ளார். இது குறித்து நீதிபதி ரஜினி கூறுகையில், மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சிறைவாசிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு மேலும் புத்தகங்கள் பெற்று வழங்கப்படும் என்றார்.

    • நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார்.
    • முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழா குறித்து பேசினர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் 74 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நூலகர் மகேந்திரன் வரவேற்றார் .

    நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார். இதில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நல சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவக்குமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழா குறித்து பேசினர்.

    நிகழ்ச்சிகளை மகளிர் வாசகர் வட்ட தலைவர்- பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் கலாவதி ,பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×