நடமாடும் நூலகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் நூலகம் செயல்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நடமாடும் நூலகம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட் டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப் பகுதிகளுக்கு நாளை முதல் (2-ந் தேதி) முதல் செல்ல உள்ளன.

இதன் மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக புத்தகங்கள் படிப்பதற்கும் மேலும் மாணவ, மாணவிகள் பொது அறிவுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், தொழில் துறை தொடர்பான வழிகாட்டி கையேடுகளை படித்து தெரிந்து கொள்ள வும் முடியும்

பழம்பெருமையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பெண்களின் சுய முன் னேற்றத்திற்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், தேவையான நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும் மற்றும் கவிதை தொகுப்புகள் கவிதை கட்டுரைகள் போன்ற சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இந்த நடமாடும் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் நடமாடும் நூலகம் செல்லும் பகுதிகளில் மாணவ, மாணவிகள் வாகனத்தி லேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள் கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலகம் உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்தவும் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தவும் பயனுள்ள வகையில் ஒவ்வொருவரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com