search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நூலகத்தில் இலவச வைபை வசதி தொடக்கம்
    X

    நூலகத்தில் இலவச வை பை வசதி வழங்கப்பட்டுள்ள காட்சி.

    உடுமலை நூலகத்தில் இலவச வைபை வசதி தொடக்கம்

    • .நூலகத்தில் அதிவேக பிராட்பேண்ட், இலவச வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளது.
    • வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2 ல்இலவச வைபை திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது.நூலகத்தில் அதி வேக பிராட்பேண்ட், இலவச வை பை வசதி வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ ,மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தங்களுக்கு தேவையான கோப்புகள் ,புத்தகங்கள் போன்றவற்றை இலவச வைபை வசதியை பயன்ப டுத்தி எளிதாக பதிவிறக்கம்செய்து பயனடையலாம் என நூலகர் கலாவதி தெரிவித்தார். மேலும் இணையதளத்தை பயன்படுத்த குறைந்த கட்டணத்தில் மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது .

    மேலும் மாணவ மாணவியர் எளிதாக பயன்படுத்தும் வகையில் புத்தகங்களுக்கு வண்ணத்தாள் ஓட்டப்பட்டு வகுப்பு வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. வைபை வசதி துவக்க நிகழ்ச்சியில் நூலகர் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் போட்டி தேர்வில் பயிற்சி பெறும்மாணவ மாணவிகள்கலந்து கொண்டனர்.

    Next Story
    ×