search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wi Fi facility"

    • .நூலகத்தில் அதிவேக பிராட்பேண்ட், இலவச வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளது.
    • வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2 ல்இலவச வைபை திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது.நூலகத்தில் அதி வேக பிராட்பேண்ட், இலவச வை பை வசதி வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ ,மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தங்களுக்கு தேவையான கோப்புகள் ,புத்தகங்கள் போன்றவற்றை இலவச வைபை வசதியை பயன்ப டுத்தி எளிதாக பதிவிறக்கம்செய்து பயனடையலாம் என நூலகர் கலாவதி தெரிவித்தார். மேலும் இணையதளத்தை பயன்படுத்த குறைந்த கட்டணத்தில் மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது .

    மேலும் மாணவ மாணவியர் எளிதாக பயன்படுத்தும் வகையில் புத்தகங்களுக்கு வண்ணத்தாள் ஓட்டப்பட்டு வகுப்பு வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. வைபை வசதி துவக்க நிகழ்ச்சியில் நூலகர் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் போட்டி தேர்வில் பயிற்சி பெறும்மாணவ மாணவிகள்கலந்து கொண்டனர்.

    சென்னை மெட்ரோ ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் ‘வை-பை’ வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #metrotrain #Chennai
    சென்னை:

    சென்னை நகரில் துரித போக்குவரத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் ஒரு வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம் பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். - சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.

    மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள், இணைப்பு வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளு, குளு வசதியுடன் ரெயிலில் பயணம் செய்ய முடிகிறது. விரைவில் மெட்ரோ ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் ‘வை-பை’ வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.



    இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணம் செய்யும் போதும் தங்களது ஆன்ட் ராய்டு செல்போனில் ‘வை-பை’ இணைப்பு மூலம் ‘செயலி’யை பதிவிறக்கம் செய்து சினிமா படங்கள், பாடல்கள், டி.வி.நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டே பயணம் செய்யலாம்.

    இதற்காக தனியாக ‘செயலி’யை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் இந்த செயலி மூலம் எச்.டி. தரத்துடன் கூடிய போழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #metrotrain #Chennai
    ×