என் மலர்
நீங்கள் தேடியது "Wi Fi facility"
- வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்களை பெறாமலேயே வைபை மூலம் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.
- ஆர்ச் குளோபல் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்த இலவச வைபை வசதியை வழங்கி வருகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக இலவச வைபை வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் இலவச இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் ஒரு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அந்தக் கருவியில் தங்களது கைப்பேசி எண்ணை பதிவிட்டு அதன் மூலம் 45 நிமிடங்கள் வரை 500 எம்.பி. டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகள் தங்களுக்கான வாகனங்களை முன்பதிவு செய்வதற்கும், வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்களை பெறாமலேயே வைபை மூலம் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.
ஆர்ச் குளோபல் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்த இலவச வைபை வசதியை வழங்கி வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்-ஐ விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 'கியோஸ்க்' எனும் எந்திரத்தில் வைத்து ஸ்கேன் செய்தவுடன் அதிலிருந்து சிறிய கூப்பன் ஒன்று வெளிவரும். அதைப் பயன்படுத்தியும் இலவச வைபை வசதியை பெறலாம்.
தற்போது சென்னை விமான நிலையத்தில் 2 கருவிகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் கருவிகள் நிறுவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- .நூலகத்தில் அதிவேக பிராட்பேண்ட், இலவச வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளது.
- வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2 ல்இலவச வைபை திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது.நூலகத்தில் அதி வேக பிராட்பேண்ட், இலவச வை பை வசதி வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ ,மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தங்களுக்கு தேவையான கோப்புகள் ,புத்தகங்கள் போன்றவற்றை இலவச வைபை வசதியை பயன்ப டுத்தி எளிதாக பதிவிறக்கம்செய்து பயனடையலாம் என நூலகர் கலாவதி தெரிவித்தார். மேலும் இணையதளத்தை பயன்படுத்த குறைந்த கட்டணத்தில் மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது .
மேலும் மாணவ மாணவியர் எளிதாக பயன்படுத்தும் வகையில் புத்தகங்களுக்கு வண்ணத்தாள் ஓட்டப்பட்டு வகுப்பு வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. வைபை வசதி துவக்க நிகழ்ச்சியில் நூலகர் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் போட்டி தேர்வில் பயிற்சி பெறும்மாணவ மாணவிகள்கலந்து கொண்டனர்.
சென்னை நகரில் துரித போக்குவரத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம் பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். - சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.

இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணம் செய்யும் போதும் தங்களது ஆன்ட் ராய்டு செல்போனில் ‘வை-பை’ இணைப்பு மூலம் ‘செயலி’யை பதிவிறக்கம் செய்து சினிமா படங்கள், பாடல்கள், டி.வி.நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டே பயணம் செய்யலாம்.
இதற்காக தனியாக ‘செயலி’யை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் இந்த செயலி மூலம் எச்.டி. தரத்துடன் கூடிய போழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #metrotrain #Chennai






