search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூலகம்"

    • மாணவர் களிடையே அதிக நேரம் செல்போன் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    தமிழக எல்லையில் உள்ள ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,720 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    அதிக அளவில் கிராமப் பகுதி மாணவர்கள் படித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கப் பள்ளியில் புதியதாக நூலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய புதிய நூலகம் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.

    இதில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசித்து மகிழ்ந்தனர்.

    இது தொடர்பாக தலைமை ஆசிரியை நர்மதாதேவி கூறுகையில் கொரோனா பரவல் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவ, மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    இதைத் தொடர்ந்து மாணவர் களிடையே அதிக நேரம் செல்போன் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இப்பழ க்கத்தை மாற்றவும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், பள்ளியில் நூலகம் அமைக்க வேண்டும் எனப் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தரிடம் கோரிக்கை வைத்தோம்.

    இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் நிதியுதவி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு துறைகள் சார்ந்த 2 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க பாட நேரத்தில் வாரம் ஒரு முறை நூலகப் பாட வேளையை புதியதாக தொடங்க உள்ளோம்.

    மாணவர்கள் வாரத்துக்கு ஒரு புத்தகம் படித்து அதில் உள்ள முக்கிய குறிப்புகளை எழுதி வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் செல்போன் பழக்கத்திலிருந்து விடு பட்டு, வாசிப்பு பழக்கத்துக்கு மாறி சிறந்த ஆளுமைகளாகத் திகழ்வார்கள் என்று கூறினார்.

    • ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது.
    • மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது.

    இந்தியாவில் எண்ணிக்கை அளவில் அதிக பொது நூலகங்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. டாப்-5 மாநிலங்களின் மொத்த நூலக எண்ணிக்கை வருமாறு...

    * மகாராஷ்டிரா - 12,191

    * கேரளா - 8,415

    * கர்நாடகா - 6,798

    * தமிழ்நாடு - 4,622

    * மேற்கு வங்கம் - 5,251

    வழக்கம் போல இந்தி பெல்ட் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருக்கின்றன.

    * உத்தரப் பிரதேசம் - 573

    * பீகார் - 192

    * மத்தியப் பிரதேசம் - 42

    இதில் இன்னொன்று; ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது. எனவே மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது:

    1. கேரளா - 4,112

    2. மகாராஷ்டிரா - 9,218

    3. கர்நாடகா - 9,429

    4. தமிழ்நாடு - 16,547

    5. குஜராத் - 18,100

    - ஸ்ரீதர் சுப்ரமணியம்

    • அவனியாபுரத்தில் நூலகத்தை காணவில்லை என்று புகார் எழுந்தது.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் 1953-ம் ஆண்டு திரு.வி.க. நூல் நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது அவனியாபுரம் ஊராட்சியாக இருந்தது.

    பின்னர் அவனியாபுரம் நகர் பஞ்சாயத்து யூனியனுக்கு கட்டிடங்கள் கட்டும்போது இந்த நூலகம் அவனியாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த கட்டிடம் பழமையான கட்டிடமாக மாறிய நிலையில் இந்த நூலகம் தற்போது அவனியாபுரம் அஞ்சலகம் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரண்மனைகாரர் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. அதன் பின்னர் அவனியாபுரம் நகராட்சியாக மாறியது. தற்போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது இந்த நூலகம் எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வாசகர் சிவமணி கூறுகையில், மிகப் பழமை வாய்ந்த அவனியாபுரம் நூலகம் தற்போது எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. திரைப்பட நகைச்சுவை காட்சியை போல் கல்வெட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடத்தை காணவில்லை.

    தற்போது இந்தப்பகுதி யில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றார். இந்தப்பகுதியில் தமிழ் அகிலன் கூறுகையில், அவனியாபுரத்தில் இருந்த நூலகத்தில் நான் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, மாஜி கடவுள், நீதி தேவன், ஓர் இரவு,போன்ற புத்தகங்களை படித்து இருக்கின்றேன் மேலும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஜெயகாந்தனின் சிறுகதைகள் போன்ற புத்தகங்களை இந்த நூலகத்தில் படித்திருக்கி றேன். தற்போது இந்த பகுதியில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தம் அளிக்கிறது என்றார்.

    மேலும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாசிப்பு திறனை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் புத்தகத்திருவிழா நடத்தி மாணவர்களிடம், இளைஞர்களிடம் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் பழமை யான நூலகத்தை கண்டு கொள்ளாமல் விட்டது அதிருப்தி அளிகிறது. எனவே கலெக்டர் இதில் கவனம் செலுத்தி அவனி யாபுரம் மையப்பகுதியில் கவுன்சிலர்கள் அலு வலகத்தின் மாடியில் காலியாக உள்ள இடத்தில் நூலகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றனர்.

    • நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, சங்க ஆண்டு விழா, பாண்டியனார் நூலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சிவகுருநாதபுரம் காமராஜர் அரங்கத்தில் நடந்தது.

    நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை எஸ்.தங்கையா நாடார் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள், முன்னாள் சங்க தலைவர்கள் வி.கே.எஸ். பன்னீர்செல்வம், வி.கே.ரத்தினநாடார், காமராஜர் வணிக வளாக வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கே.எஸ் சேர்மசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அண்ணாமலை கனி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், சுரண்டை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த மருத்துவ முகாமை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொ.காசிராணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். பாண்டியனார் நூலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகள், முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அங்கிருந்து விழா நடக்கும் காமராஜர் அரங்கத்திற்கு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.முருகன், துணைச் செயலாளர் கே.டி.பாலன், பொருளாளர் டி.ரவி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.வி.ராமர், சி.எம்.சங்கரேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழா மதுரையில் நாளை மறுநாள் கோலாகலமாக நடக்கிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.

    மதுரை

    தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக 'கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம்' கட்டப்பட் டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்த–கங்களுடன் உள்ள கலைஞர் நூற் றாண்டு நூலகம் மதுரையின் மற்று–மொரு அடையாளமாக திகழப்போ–கிறது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரை–யில் அமைக்கப்படும் என்று அறி–விக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்த–வுடன் இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூல–கம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

    சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூல–கம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப் போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேசத் தரத்தில் நூலகம் மதுரையின் மற் றொரு அடையாளமாக கலைஞர் நூற் றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்குத் திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதி–யாக தற்போது 134 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

    குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெறலாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள் ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன்கூடிய ஆங்கில நூல் பிரிவும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப் பட்டுள்ளன.

    ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்ப–டச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரு–மான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் கலை–ஞர் நூற்றாண்டு நினைவு நூல–கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விழா தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கே.என்.நேரு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 மாலையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற் கிறார்கள்.

    அறிவுத் திருவிழாவாக இந்தத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்ப–தற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டு–மின்றி, பல்வேறு தொழில்நுட்பங்க–ளின் வாயிலாகக் கற்று உலகத்தரத் திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை–யும், இளைய தலை–முறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார்.
    • இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.

    சென்னை:

    சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நூலகத்துக்கு ஐதராபாத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அகர்சனா 1000 புத்தகங்களை வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    மாணவியின் தந்தை சதீஷ், அகர்சனாவின் இந்த செயலை பாராட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

    இதன் காரணமாக இதுபோன்று குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவர்களின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நொளம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.
    • இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்திருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடந்தது. இதில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். திறப்பு விழாவில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தங்கவேலு, புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    • பூட்டிகிடக்கும் அரியலூர் நகராட்சி நூலகம் மீண்டும் திறக்கப்படுமா என வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்
    • அனைத்து தினசரி நாளிதழ்களும் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பதால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது

    அரியலூர்:

    அரியலூர் நகராட்சிக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர். அரசு மருத்துவகல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அரியலூர் நகராட்சி வெள்ளழத்தெருவில் நகராட்சி படிப்பகம் சுமார் 25ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. நூலகவரி, வீட்டுவசதி வரியுடன் வசூல் செய்யப்பட்டு வந்தது. நகராட்சி படிப்பகம் காலையும், மாலையும் திறந்து இருக்கும்.

    அனைத்து தினசரி நாளிதழ்களும் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பதால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது. கொரோனா காலத்தில் பொது மக்கள், வாசகர்கள் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு அனைத்து நூலகங்களையும் மூட உத்தரவிட்டது, கொரோனா பாதிப்புகள் சீரான நிலையில் மூடியிருந்த நூலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் அரியலூர் நகராட்சி நூலகம் திறக்கப்படவில்லை.எனவே நகராட்சி நூலகத்தை உடனடியாக திறந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சமூகஆர்வலர்கள், வாசகர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நூலக புரவலருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • தன்னார்வலர் முனியசாமி கண்ணன் புரவலராக இணைந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. நிர்வாகியான புரவலர் ஆசிரியர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார்.

    ஆசிரியர்கள் ராமையா,பெருமாள் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்க ளையும் வழங்கி, புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர்.

    மேலும் இந்த விழாவில் நூலக தன்னார்வலர் முனியசாமி கண்ணன் ரூ. 21 ஆயிரம் செலுத்தி 92-வது புரவலராக இணைந்தார். அவருக்கு நூலகத்துறை சார்பிலும், வாசகர் வட்டத்தின் சார்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நூலகர் முத்து நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.
    • முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள மதுக்கூர் கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவி–க்கும் வகையில் பேச்சு மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

    போட்டிகான ஏற்பாடுகளை நூலகர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார், இதில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.

    இதில் வர்த்தக சங்க கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.பி.பிரகாசம், சரவணன் வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் மெட்ரோ.சேகர், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் சமூக ஆர்வலர்கள் முஜிபுர் ரஹ்மான், நவமணி, சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி–களுக்கு பரிசளித்தனர்.

    இறுதியாக முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் மதுக்கூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் துணைத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் துரையரசன் நன்றி கூறினார்.

    • தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகள், குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகள், ரெயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜே.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    • புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • பேராவூரணி அரசு பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டிடம் கட்டப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ரூபாய்.1 கோடியில் பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி, நவீன நூலகம் உள்ளிட்டவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்,

    சொர்ணக்காடு ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூ.21.45 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு கொறடா கோவி.செழியன் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×