search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை"

    • இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
    • பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியை பயிற்சிக்காக அனுப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஒரு ஆசிரியர் மட்டுமே 120 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பள்ளியின் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து நீர் கசிந்து சுவர் வழியாக வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. இதனால் லேசான கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமரவைத்துள்ளனர்.

    பள்ளி நேரத்தில் மழை பெய்யும் போது அந்த வகுப்பறையிலும் நீர் தேங்கி நிற்கிறது. இதனை அங்குள்ள துப்புரவு பெண் ஊழியர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அகற்றி வருகிறார். இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நேரங்களில் மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை. எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், தொடக்க கல்வி அலுவலரும் இப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பள்ளி இயங்கும் வகையில் பழைய கட்டிடத்தினை சீரமைத்து தரவேண்டுமென மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்

    ஆலங்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1 8 வகுப்பறையுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளிடம் அவர் பேசுகையில்:-

    மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டப்பட உள்ளது. சுமார் 50 ஆண்டு காலத்திற்கு கட்டிடம் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கட்டப்படும். மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வகுப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு நல்ல முறையில் படித்து உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ரவி, ஊராட்சி தலைவர் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணி, சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருண் ஜார்ஜ், வெங்கடேஷ், ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல், கட்டு மாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து மேலப்போலகம், வவ்வாலடி பகுதிகளிலும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பால முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
    • பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் தாலுக்கா மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் கோ.பூவனூர், மாத்தூர், வயலூர் மற்றும் கோ.பவழங்குடியை சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிக்கென கட்டப்பட்ட 10 வகுப்பறையில் அமர்ந்து பயில்கின்றனர். அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பறையிலும், 4. 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனித்தனி வகுப்பறையிலும் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமும் மிகவும் பழைமையானது என்பதால், கட்டிடத்தின் காரைகள் மாணவர்கள் மீது விழுகின்றன. அப்போதெல்லாம் மாணவர்கள் வெளியில் அமரவைக்கப்பட்டும், கலை அரங்கத்திலும் அமர வைக்கப்படு கின்றனர்.

    எனவே, உயர்நிலை பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற்றோர் கல்வி அமைச்சர், கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் என அனைவரிடமும் மனு கொடுத்தனர். 3 ஆண்டு களாக மனு கொடுத்தும் பள்ளியின் நிலை மாறாமல் பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தி லேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்ப றைக்குள் செல்லாமல் புறக்கணித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பேச்சு நடத்திய போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அவரது பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்த தகவல் அறிந்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீ சார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தி வந்த மாணவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் நியாயமான கோரிக்கை குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்து, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் தேவி மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனை யேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    • காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி கோரிக்கை வைத்தனர்.

    நாகர்கோவில் :

    குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்ப தால் போதுமான வகுப்ப றைகள் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொது மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த அவர், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    தொடர்ந்து வட்டார தலைவர் பிரேம் குமார் தலைமையில் கால்டு வின் முன்னிலையில் விஜய் வசந்த் எம்.பி. புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி செய்து அடிக்கல் நாட்டி னார்.

    நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார தலைவர் ஜெபா, குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோ பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி:

    காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் தோவாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், வட்டார துணை தலைவர் மரிய ஜான், செயல் தலைவர் மிக்கேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
    • சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.

    • ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • 8 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் நூற்று க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லாத நிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி ன் காணொளி காட்சி மூலமாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதனையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன்,திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் முருகன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்களுக்கு இனிப்பு கள் வழங்கினர்.

    இதேபோல் செம்மங்குடி ஊராட்சியில் ரூ.27லட்சத்தி ல் புதிதாக 2வகுப்பறை களுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அவை தமிழகமுதல்வரால் காணொளிகாட்சி மூலம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன்,துணை தலைவர் ரமணிசந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.

    கொள்ளிடம் அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 27 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகள் அடங்கிய இரண்டு வகுப்பறைகள்வுடனான புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை குத்துவி ளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் தியாகரா ஜன்,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் ஞான புகழேந்தி , தலைமை ஆசிரியர் தங்கசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கொள்ளிடம் அருகே மகேந்திர பள்ளி, உமையாள்பதி, பழைய பாளையம், பண்ணங்குடி, பச்சபெருமா ள்நல்லூர், அரசூர், ஓலையாம்புத்தூர் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் ரூ 2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டிருந்த பள்ளி கட்டடங்கள் துவக்கி வைக்கப்பட்டன.

    • பரமக்குடி அருகே சின்ன அக்கிரமேசி கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் ரூ.29.3 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் நயினார்கோவில் ஒன்றிய சின்ன அக்கிரமேசி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல் ஆகிய கிராமங்களிலும் தலா ரூ.29.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கூட கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நயினார்கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசி மணிமன்னன், நயினார்கோவில் ஒன்றிய துணைச்செயலாளர் திலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது.
    • மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

    திருவொற்றியூர்:

    மணலி, பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது. மாணவர்களை பெரிதும் கவரும் வகையில் பல வண்ணங்களில் விமானம், வந்தே பாரத் ரெயில், இஸ்ரோ ராக்கெட் என வகுப்பறைமுகப்புகளில் வரையப்பட்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், தலைமை ஆசிரியர் கோமளீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் பங்கேற்பு
    • வல்லன்குமாரன்விளை பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்பட்ட அமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து நாகர்கோவில் கவிமணி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை யடுத்து 5 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.

    இதனை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கவிமணி பள்ளியில் நடந்த விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திட்ட அதிகாரி பாபு, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், தி.மு.க. நிர்வாகிகள் அருண் காந்த், சரவணன், தொடக்க கல்வி அலுவலர் தாம்சன், உதவி அதிகாரி எட்வின் ஜேக்கப், பள்ளி தலைமை ஆசிரியர் கமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய வகுப்ப றையில் மாணவ-மாணவி கள் எளிதில் கல்வி கற்றுக் கொள்ள வசதியாக வரைபடங்கள் வரையப் பட்டிருந்தது.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் சம்பந்தப் பட்ட வரை படங்கள் ஒவ்வொரு வகுப்ப றையிலும் வரையப்பட்டு உள்ளது. இதேபோல் வல்லன்குமாரன்விளை பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் மாநக ராட்சியில் 44-வது வார்டுக்குட்பட்ட சுவாமி விவேகானந்தர் தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 33-வது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 46-வது வார்டுக் குட்பட்ட வடக்கு சூரங்குடி பள்ளி வாசல் முன்புள்ள தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 47-வது வார்டு வள்ளன்குமாரவிளை பகுதி யில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார் தளம், 40-வது வார்டுக்குட்பட்ட பைத்தும் மால் நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, 26-வது வார்டு வசந்த் நகர் எம்.கே. தெருவில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×