search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசகர்கள்"

    • இதில் ஆட்டிறைச்சி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு பன்னீர் மசாலா, பிரைடு ரைஸ், போன்றவை சிறப்பு வாய்ந்தது ஆகும் .
    • இதன் மூலம் தற்போது இவருக்கு 1.5 மில்லியன் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர்.

    வட மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாரி டிரைவராக உள்ளார். வடமாநில பகுதிகளுக்கு இவர் சரக்குகளை லாரியில் ஏற்றி நீண்ட நாள் பயணம் செய்வார்.

    அப்போது உணவுக்காக லாரியின் முன்பகுதி கேபினில் கியாஸ் அடுப்பை வைத்து சமையல் செய்தார்.அதில் பெரும்பாலும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.




    தான் தயாரித்த ருசியான உணவுகளை அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து யூடியூப் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது சமையல் வீடியோக்களை பார்த்து இவரை சமூக வலைதளத்தில் ஏராளமானோர் பின்தொடர் தொடங்கினர். இதன் மூலம் அவர் பிரபல சமையல் கலைஞராகவே மாறினார்.

    இதைத் தொடர்ந்து தினமும் ஆர்வத்துடன் பல வீடியோக்கள் பதிவிட்டார்.இதுவரை 675 வீடியோக்கள் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் தற்போது இவருக்கு 1.5 மில்லியன் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர். இவரது உணவு தயாரிப்பு முறையை தினமும் வாசகர்கள் 'பாலோ' செய்து வருகின்றனர்.




    ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம், மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வீடியோக்களைப் பகிர்ந்து தனது சமையல் பாணி, உணவு தயாரிப்பு செயல்முறைகள் பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

    இதில் ஆட்டிறைச்சி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு பன்னீர் மசாலா, பிரைடு ரைஸ், போன்றவை சிறப்பு வாய்ந்தது ஆகும் . அவர் உணவு தயாரிக்கும் போது கூறும் அறிவுரைகள், பேசும் விதம் பார்வையாளர்களை வெகுவாக கவந்து வருகிறது.

    இதன் மூலம் இணைய தளத்தில் தினமும் வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அவருக்கு வருமானமும் பெருகியது. இந்த வருமானம் மூலமாக தற்போது ஒரு புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார்.



    லாரி டிரைவராக இருந்தாலும் தனது திறமை மூலம் ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக மாற்றி பெயர் புகழ், வருமானம் பெற்ற ராஜேஷ் ரவானி உண்மையில் பாராட்டுக்குரியவர்.

    இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதனை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார். இணைய தளத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.

    • மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
    • எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

    மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி, கவிஞர் சரஸ்வதி தாயுமானவன், மூத்த வாசகர் யேசுதாஸ் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    நான்கு நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமையில் எட்டு நூலகர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த புத்தகங்களை திறனாய்வு செய்தனர்.

    இரண்டாவது அமர்வில் தமிழ் ஆசிரியர் நமாமலைவாசன் தலைமையில் டிஜிட்டல் மீடியாக்களால் வாசிப்பு அதிகரித்திருக்கிறதா? குறைந்து இருக்கிறதா ? என்ற வாசிப்பு குறித்த பட்டிமன்றம் நூலக வாசகர்களை கொண்டு நடத்தப்பட்டது.

    மூன்றாவது அமர்வாக நூலகர் ஆசைத்தம்பி தலைமையில் கல்வியா ளர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த நூல்களை திறனாய்வு செய்தனர்.

    இறுதி நிகழ்வாக எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நூலகர் அன்பரசு வரவேற்புரை வழங்கினார்.

    கூத்தாநல்லூர் நூலகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ மன்னை தலைவர் நமாமலைவாசன் தலைமை தாங்கினார். தமிழ் பல்கலைகழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசு

    சிறப்புரையாற்றினார். ஜே.சி.ஐ முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    முடிவில் மன்னார்குடி நூலகர் ராஜா நன்றி கூறினார்.

    நிகழ்வில் மன்னார்குடி வட்ட நூல்கள் ஜே.சி.ஐ உறுப்பினர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மன்னார்குடி கூத்தா நல்லூர் கிளை நூலகங்கள் மற்றும் ஜே.சி.ஐ மன்னை ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
    • விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்ட இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 55-வது தேசிய நூலக வார விழாவை நடத்தியது.

    இந்நிலையில் தேசிய நூலக வாரவிழாவின் நிறைவு விழா இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடை பெற்றது.

    விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, மாவட்ட மைய முதல் நிலை நூலகர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வாசிப்போம், யோசிப்போம் என்ற தலைப்பில் ெசாற்பொழிவாற்றினார்.  

    ×