search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி"

    • போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு.
    • காற்று மாசு குறித்த புகாரில் உண்மை இல்லை.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காப்பர் கழிவுகளை தாங்கள் நீக்குவதாகவும், அதற்கான செலவுகளை மட்டும் ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெறப்படும் என தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், ஆலை தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முழுக்க முழுக்க விதிமீறல்கள் நடந்துள்ளன என்று ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த நடவடிக்கை சரியானது என தமிழக அரசு வாதம் செய்துள்ளது.

    ஆனால், காற்று மாசு குறித்த புகாரில் உண்மை இல்லை என வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதம் செய்துள்ளது.

    • ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    • உன் முறுக்கிய முயற்சியில் இருக்கிற சமூகம் பாடம் கற்கட்டும்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இரும்பைப் பொன்செய்யும்

    இருட்கணம் எரிக்கும்

    சனாதன பேதம்

    சமன் செய்யும்

    ஆதி அவமானம் அழிக்கும்

    விலங்குகட்குச் சிறகுதரும்

    அடிமைப் பெண்ணை

    அரசியாக்கும்

    விளக்குமாறு விளங்கிய கையில்

    செங்கோல் வழங்கும்

    கல்வியால் நேரும்

    இவையென்று காட்டிய

    பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

    உன் முறுக்கிய முயற்சியில்

    இருக்கிற சமூகம்

    பாடம் கற்கட்டும்

    வளர்பிறை வாழ்த்து!


    • ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.
    • வறுமையை உணர்ந்து முன்னேறி படித்த ஸ்ரீபதி தற்போது நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி, டி.என்.பி.எஸ்.சி. எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    இந்த பணியிடங்களுக்கு 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 472 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்முக தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவும் வெளியானது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண்ணும் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.

    இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை என கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.

    அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்.

    'நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலை காண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தை தாய் மாரே, - நும் பெண்களைக் கற்க வைப் பீரே! இற்றைநாள் பெண் கல்வி யாலே, - முன்னேற வேண்டும் வையம் மேலே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஸ்ரீபதிக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும், குழந்தை பிறந்த 2-வது நாளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து எழுத்து தேர்வில் கலந்துகொண்டு அவர் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நீதிபதியாக தேர்வாகி உள்ள ஸ்ரீபதிக்கு ஜெயசூர்யா என்ற தம்பியும், சரண்யா என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர்களது தந்தைக்கு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் தற்போது குப்பநத்தம் அணை உள்ள இடத்தில் விவசாய நிலம் இருந்துள்ளது.

    குப்பநத்தம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது இவர்களது குடும்பத்தினரின் நிலத்தையும் அரசு கையகப்படுத்தியது. இதனால் ஸ்ரீபதி குழந்தையாக இருக்கும்போதே, தாயார் மல்லிகா தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் குடும்பத்தினருடன் குடியேறினார்.

    அங்கு ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.

    ஏலகிரி மலையில் உள்ள சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை ஸ்ரீபதி பள்ளிப்படிப்பு முடிந்ததும் சட்ட படிப்பை தேர்வு செய்து டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடம் சட்டம் பயின்று வக்கீலானார்.

    வறுமையை உணர்ந்து முன்னேறி படித்த ஸ்ரீபதி தற்போது நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இதனால் அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • சட்டப்பணிகளின் நோக்கமானது அனைவருக்கும் சமநீதி பெற வேண்டும்.
    • யாராக இருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்டின் வழிகாட்டுதல்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சாவூர் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி தலைமையில் தேசிய சட்டசேவைகள் தினத்தை முன்னிட்டு கல்லுரி மாணவர்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமானது தஞ்சாவூர் பாரத் மற்றும் அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது.

    இம்முகாமில் சார்பு நீதிபதி இந்திரா காந்தி பேசியதாவது:-

    தேசிய சட்ட சேவைகள் தினம் என்பது தேசிய சட்ட சேவைகள் அதிகார சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சட்டப்பணிகளின் நோக்கமானது அனைவருக்கும் சமநீதி பெற வேண்டும். நாட்டில் உள்ள கடைக்கோடியில் இருப்பவருக்கும் சாமானிய மக்களும் கூட சமநீதி பெற வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும்.

    மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பபு சட்டத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.

    மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வழக்க றிஞர்கள் பாலகிருஷ்ணன் ,சக்திவேல் , கல்லூரி முதல்வர் குமார், பேராசியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் நிர்வாக அலுவலர்ச ந்தோஷ்குமார் மற்றும் சட்டத்தன்னா ர்வலர்கள் செய்திருந்தனர்.

    • தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது.

     தாராபுரம்:

    தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சட்டம் என்றால் என்ன? என்பது பற்றி பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பணிபுரியும் இடத்தில் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது எப்படி? என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் சினிமா நடிகர், நடிகை போல எண்ணி ஆண்களுடன் பழகி வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம். பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது. மாணவர்கள் மன அழுத்தம் குறைக்க யோகா, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும்" என்றார்.

    இதைத்தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு பேசுகையில், குடும்ப பெண்கள் யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை தெரியப்படுத்தக் கூடாது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ளது. மருத்துவ துறையில் செவிலியர்களின் செயல்பாடு நீதித்துறைக்கு பயன்பட வேண்டும் என்றார். தாராபுரம் வக்கீல் சங்கச்செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் ேபசுகையில், பெண்கள் பயன்படுத்தும் செல்போனில் ஏற்படும் பயன்களையும், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் எடுத்துரைத்தார். தாராபுரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கலைச்செழியன் பேசுகையில், கொரோனா தொற்றின் போது முன் களப்பணியாளராக செவிலியர்கள் மற்றும் நர்சிங் துறையை சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தன என்றார்.

    • மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது.
    • மரங்களுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

    நாகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:- மரங்கள் உயிரின் சுவாசம் போன்றது மரங்க ளுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.

    இதனால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கிறது.

    எதையும் உணர்ந்து பார்க்கும் போது தான் அதன் சிறப்புகள் வெளிப்படும் அப்படித்தான் மரங்கள் மரங்களை நட்டு அவற்றுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் அவற்றின் பயன் முழுமையாக கிடைக்கும் தற்போது திருமண விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது இது நமக்குள் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை உணர்த்துகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி சுபாஷ்சந்திரபோஸ், வழக்கறிஞர் சங்க தலைவர் பாரி வழக்கறிஞர் சங்க செயலாளர் பாரதிராஜா, துணை தலைவர் வெங்கடேஷ், பொருளார் மதியழகன் துணை செயலாளர் வீரகுமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணிவண்ணன், குமரவேல், மாதவன், அறிவுச்செல்வன், பாலசுப்பிரமணியன், அன்பரசு, மகேஷ், .கலியராஜன், ராஜசேகர், சுதாகர், ராஜ்குமார், குலாளன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    • உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
    • காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இருந்து வருபவர் தங்கவேலு.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு சி.சி.ஏ. என்ற வழக்கில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 26.6. 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26.6.2023-ந் தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று (16-ந் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என் தெரிவித்தார்.

    சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கிஷோர்குமார், யூடியூபில் 45 லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள் என்றும், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில், இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்... சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என் தெரிவித்தார்.

    டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்தார்.

    • 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
    • தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

    முல்லைத்தீவு:

    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.

    சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டாணா சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

    பேரணியின் முடிவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதிவதனி வணங்காமுடி ஆகியோர் மாணவர்களிடையே கூறியதாவது:-

    பீடி, சிகரெட், புகையிலை இவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களின் பிறப்பிடமாகவும், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்,பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் சிலரில் தங்களது பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு இலக்கானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதை பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்–போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    பேரணியின் போது தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என நீதிபதி பேசினார்.
    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 25-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் தன்னம்பி க்கையுடன் உழைத்து, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அரசுப்பணிகளுக்கு செல்ல படிக்கும் காலத்தில் இருந்தே கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  

    மாணவிகள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டைரியில் நீங்கள் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை குறித்து வைத்து தினமும் வாசித்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும். 


    பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் காவலர் தேர்வுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பெருமையுடைய இந்த கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வேந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், துறைத்தலைவர்கள் ரேணுகாதேவி, அறிவழகன், கண்ணன், ஆயிஷா, மும்தாஜ் பேகம், விஜயகுமார் கிருஷ்ணவேணி, ஹரிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர். 
    ×