என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
செங்கோட்டை நூலகத்தில் உலக புத்தக தின விழா
- வாசிப்பின் அவசியம் குறித்து வேலம்மாள் விளக்க உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் வாசிப்பு பற்றிய உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை நூலகத்தில் உலக புத்தக தின விழா மற்றும் தமிழ்நாடு வாசிப்பு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதி மூலம் தலைமை தாங்கி னார்.
வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற கல்லூரி முதல்வர் வேலம்மாள் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார்.
எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு, இல்லம் தேடி கல்வி ஒருங்கி ணைப்பாளர் அய்யப்பன், இலஞ்சி டேனியல், கல்லூரி நூலகர் ஏஞ்சலின், பட்டிமன்ற பேச்சாளர் மஹமுதா தசையத், கவிஞர்கள் அய்யப்பன், இளங்குமரன், தங்கராஜ், வக்கீல் கார்த்திக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மைய மாநில துணைத்தலைவர் ராஜா வாசிப்பு பற்றிய உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை விழுதுகள் சேகர் தொகுத்து வழங்கி னார். நூலகர் ராமசாமி நன்றி கூறி னார். விழாவில் வாசகர்கள் 70 பேர் கலந்து கொண்டனர்.