search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம்"

    • உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
    • பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. மற்றும் அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சை நடத்தப்பட்டது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்-1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், பொருளாளர் பிரபாகரன், அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிசந்திரன், திருப்பூர் மாவட்ட வக்கீல் அருணாசலம் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இதில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலா ளரும், சார்பு நீதிபதியு மான ராஜா மகேஷ்வர் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் அ ட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அதே போல் மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தி னவிழா கொ ண்டாடப்பட்டது. பெரம்ப லூரில் உள்ள மரகதவ ல்லித்தாயார் சமேத மதனகோ பாலசுவாமி கோவிலில் 77-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டிய ராஜகோபுரம் அருகே கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், கோவில் பரிஜாரகர் சம்பத், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்றது.
    • மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
    • தன் மீதான குற்றச்சாட்டுகளை பெண்ணின் கணவர் மறுத்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இந்நிலையில் அந்த பெண், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் பிரிவு 12-ன் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தனது வயது, உடல் நிலை பிரச்சினை மற்றும் தான் வளர்க்கும் 3 ராட்வீலர் வகை நாய்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு இருந்தார்.

    இந்த வழக்கை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோமல்சிங் ராஜ்புத் விசாரித்தார். இந்த வழக்கில் பெண் சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்வேதா மோரே வாதாடுகையில், இருவருக்கும் 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களின் 2 திருமணமான மகள்கள் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.

    இரு தரப்புக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அப்போது பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அதை அவர் பின்பற்றவில்லை.

    அவர்கள் ஒன்றாக இருந்த போது பெண் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அவருக்கு சில உடல் நிலை பிரச்சினைகளும் உள்ளது. மேலும் அவர் 3 நாய்களை வளர்த்து வருகிறார்.

    அதே நேரம் மனைவியை பிரிந்த நபர் தற்போது வேறு ஒரு நகரத்தில் தொழில் செய்து வருகிறார். அவருக்கு வருமானமும் வருகிறது. எனவே அவர் இடைக்கால பராமரிப்பு செலவாக மாதம் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும் என வாதிட்டார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த பெண்ணின் கணவர் மறுத்தார். தனக்கு நிலையான வருமானம் எதுவும் இல்லை என கூறிய அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பராமரிப்பு தொகையை வழங்க முடியாது என கூறினார்.

    அவரின் இந்த வாதத்தை கோர்ட்டு ஏற்க மறுத்தது. மேலும் குடும்ப வன்முறைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, அந்த பெண் இடைக்கால நிவாரணத்திற்கு தகுதி பெற்றவர் என தெரிவித்ததோடு, அந்த பெண் வளர்க்கும் 3 நாய்களுக்கு ஆகும் பராமரிப்பு செலவை கொடுக்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டார்.

    • போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
    • இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

    ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

    இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    • மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
    • சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களும், அண்ணா சிலை அருகே வாடகை கட்டிடத்தில் சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.

    தற்போது குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்படும் கட்டிடத்துக்கு அருகிலேயே நீதித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அப் துல்குத்தூஸ், மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இவர்கள் நீதிமன்ற அலுவல் பணிகளை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சிவகங்கை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி கீதா, மானாமதுரை நீதிமன்ற நீதிபதி அருண் பாண்டியன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

    முன்னதாக, நீதிபதிகளை மானாமதுரை வக்கீல்கள் சங்க தலைவர் கணேசன், செயலர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான வக்கீல்கள் வரவேற்றனர்.

    • கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
    • ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.

    இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.

    இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.

    விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.

    பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

    குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.

    இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.

    பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • மொத்தம் 1996 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தருமபுரி,

    தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படியும் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா, மாவட்ட குடும்ப நல கோர்ட்டு நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் பங்கேற்று சமரச தீர்வு காணும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார்கள். வழக்குதாரர்கள், வக்கீல்கள் விசாரணையில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில், தர்மபுரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வார கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 1996 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இவற்றில் 1464 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.4 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

    • சேவை குறைபாடு காரணமாக லாரி டிரைவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 40), லாரி டிரைவர். இவரை சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பெரம்பலூர் கிளை மேலாளர் காத்தவராயன், நிதி வசூல் நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் அணுகினர். தங்களது நிறுவனத்தில் வேறு ஒருவர் ஒப்பந்த முறையில் கடன்பெற்று தவணையை முறையாக செலுத்தாமல் விட்டிருந்த 14 சக்கரங்கள் கொண்ட லாரியை ராமகிருஷ்ணன் பெயருக்கு மாற்றம் செய்து, எளிய தவணைகளில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் வகையில் கடனுதவியும், (ஹையர் பர்சேஸ்) அடிப்படையில் ரூ.11 லட்சமும் நிதியுதவி தருவதாக கூறினர்.

    மேலும் லாரியின் மீதான காப்பீடு மற்றும் அதில் ஏற்பட்டிருந்த பழுது ஆகியவற்றை சரி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.இதனை நம்பிய ராமகிருஷ்ணன், கிளை மேலாளர் மற்றும் நிதி வசூல் நிர்வாகி ஆகியோர் தந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தார். முதல் தவணையாக ரூ.56 ஆயிரமும் செலுத்தினார். அடுத்தடுத்த தவணைகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் செலுத்திவிட்டார்.இந்தநிலையில் ராமகிருஷ்ணன், மேற்கண்ட லாரியின் பழுதுகளை நீக்கி, தனது பெயருக்கு பதிவு சான்றை மாற்றித்தருமாறு கிளை மேலாளர் மற்றும் நிதி வசூல் நிர்வாகி ஆகியோரிடம் முறையிட்டார்.

    இதனை செய்து தராமல் ராமகிருஷ்ணன் அலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராமகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதிநிறுவனத்தின் பொதுமேலாளர், பெரம்பலூர் கிளை மேலாளர், நிதி வசூல் நிர்வாகி, ஏரியா மேலாளர் (ரிசிவபில்ஸ்) ஆகிய 4 பேர் மீதும் தனது வக்கீல் சுப்ரமணியன் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், லாரி டிரைவர் ராமகிருஷ்ணனிடம் முறையற்ற வணிகம் செய்தமைக்காகவும், நிதிநிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள எதிர்மனுதாரர்கள் 4 பேரும் தனியாக அல்லது கூட்டாக இணைந்து ரூ.1 லட்சத்தை நிவாரணமாக ராமகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசமாக பேசி முடித்து கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் (சமாதானமாக செய்யக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக தீர்வு பெற ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

    எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது சம்பந்தமாக, நாள்தோறும் சமரச பேச்சுவார்த்தை நடத்த தனித்தனியாக நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • நீதிபதி கே.எல்.பிரியங்கா பெருந்துறை நீதிமன்றத்திற்கு மாறுதலாகி செல்கிறார்.
    • வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக கே.எல்.பிரியங்கா பணிபுரிந்து வந்தார். தற்போது சிவகிரி நீதிமன்றத்தில் இருந்து மாறு தலாகி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற த்திற்கு செல்ல இருப்பதால் அவருக்கு பிரிவு உபசார விழா சிவகிரி நீதிமன்ற அலு வலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மருதப்பன், பிச்சையா, கண்ணன், யோக ராஜ், பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

    • பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில் ஏற்படுத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்க இது உதவாது.

    ஒரு மாவட்டத்தில் 300-க்கும் கூடுதலான 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்' குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கு கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

    தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்; அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சி்றப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது சரியல்ல. இது குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் மட்டுமே வகை செய்யும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும்; குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×