search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை"

    • வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
    • வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மெண்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

    வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடி சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள் முன்வர வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மெண்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
    • மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது::- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதை யும், நீர்நிலைகளில் குளிப்ப தையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும் 04142 - 220700 04142 - 23393 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

    கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

    மேலும் மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், சி.சி.டி. என்.எஸ். பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் சூப்பிரண்டு சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர்.
    • மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் விளக்கி, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற்று, சிறு, குறு பனியன் தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழில்துறையினரின் பாதிப்பு குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    • சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மண்டல மேலாளர் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொது மக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கருர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி அன்று 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி அன்று 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி அன்று 520 கூடுதல் பஸ்களும், மேலும் திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி அன்று 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11-ந் தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.மேலும் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தீபாவளி முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமமான 'மோவூர் முட்டம். கால்நாட்டா ம்புலியூர் ,ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில் கீழணை உதவி செயற் பொறியாளர் ெகாளஞ்சிநாதன் முன்னிலையில் குமராட்சி உதவி பொறியாளர் அருளரசன் ஆகியோரின் நேரடி பார்வையில்இந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தற்பொழுது தூர்வாரப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் அபாயத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவாடனை

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினதில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் செல்வது வழக்கம்.

    தேவிப்பட்டினத்தில் இருந்து எஸ்.பி. பட்டினம் வரை உள்ள இருபுறமும் சாலையில் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டி கள் மிகுந்த அச்சத்தில் சாலையில் பயணிக் வேண்டி உள்ளது. மேலும் சாலையின் வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் சாலையில் செல்லும் போது எதிரில் கனரக வாகனம் வந்தால் ஒதுங்கக் குட முடியாத சூழ்நிலை ஏற் படுகிறது. இதனால் வாகன யோட்டிகளுக்கு காயம் மற்றும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனை நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக உள்ளனர்.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன.
    • பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறை , செம்ப னார்கோயில், சீர்காழி, குத்தாலம், மங்க நல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் 300க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.

    இந்நிலையில் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கடை உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் கலெக்டர் மகா பாரதி தலைமையில் மயிலா டுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.மீனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தொட ர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் மகா பாரதி பட்டாசு கடைகளில்உரிய பாதுகாப்பு நடவடி க்கை களை மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறு த்தினர்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பட்டாசு கடை உரிமை யாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் மயிலாடுதுறை தாசில்தார் சபிதா, தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கோபுரஜபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒன்றியத்தில் செயல்படுத்த ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் கோபுரஜபுரம் ஊராட்சியில் மகளிர் குழு கட்டிடம்,சமுதாய கூடம், அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும்.

    54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலில் தனி சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

    திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்ட முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், இளஞ்செழியன், ஆரூர் மணிவண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.

    • தென் மாவட்டங்களுக்கு மோசமான நிலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.

    மதுரை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு புறம் தொடங்கியிருக்க வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்க ளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்திருந்த நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் பட்டியலில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரைக்கு பல்வேறு ஊர்க ளில் இருந்தும், அண்டை மாவட்டங்களை சேர்ந்த வர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள்.

    இதற்காக அவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால் அரசு பேருந்துகளின் நிலைக்கு பயந்து தற்போது பயணத்தை ரத்து செய்யும் அளவுக்கு அச்சமடைந்துள்ளனர். காரணம் சற்றும் பராமரிப்பில்லாமல் அசாதாரண பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ள அரசு பஸ்களின் நிலை தான் என்று புகார் எழந்துள்ளது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு எந்த வித சிரமமும் இன்றி வெளியூர்களுக்கு பயணிக்கலாம் என்ன அரசு உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்துமே துளியும் பராமரிப்பு இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கூரை பெயர்ந்தும், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாமலும் பல பேருந்துகள் உள்ளதால் மழைக்காலங்களில் அதில் பயணம் செய்பவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. வழி நெடுகிலும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து மிக கனமழை பெய்தது. இதனால் பஸ்சின் மேற்கூரையிலிருந்து குழாயை திறந்தது போல் தண்ணீர் கொட்டிக் கொண்டே வந்தது. மேலும் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாததால் பேருந்துக்குள் மழை பெய்தது போன்று தண்ணீர் பாய்ந்தது.

    இதன் காரணமாக இருக்கைகள் இருந்தும் பயணிகள் அமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த குடையை விரித்தும் பஸ்சில் பயணம் செய்த னர். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாடை வாங்கிவிட்டு திரும்பிச் சென்ற பயணிகள் பேருந்துக்குள் கொட்டிய மழை நீரால் புத்தாடை நனைந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.

    சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை-தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்து இவ்வளவு மோசமான நிலையில் இருந்தால் பயணிகள் எப்படி பயணம் செய்வார்கள் என்பதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக் கொண்டனர்.

    இது பற்றி மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, இந்த பேருந்து இன்று இரவுடன் சேவையை நிறுத்திக் கொள்ளும் என்றும், பயணிகள் மாற்று பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன் இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.

    • சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டையில் வானமாதேவி செல்லும் சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் அவ்வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ம் மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மேயர் மகேஷ் உறுதி
    • ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது.. ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

    மனுக்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் மேயர் மகேஷ் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மழை பெய்து வருவதால் ஆங்காங்கே சாக்கடை கால்வாய் நிரம்பி மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் செல்கிறது. இதை தடுக்கும் வகையில் சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றும் பணி நடக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. எனினும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தினமும் 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன.

    முக்கடல் அணையில் தண்ணீர் இல்லாமல் போனதால் புத்தன் அணையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது முக்கடல் அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து முக்கடல் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு புத்தன் அணையில் இருந்து வரும் தண்ணீரும் வழங்கப்படுகிறது. எனவே நாகர்கோவில் மாநகர மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக 3-வது வார்டு அந்தோணியார் தெருவில் ரூ.3.10 லட்சத்தில் கான்கிரீட் தளம், 34-வது வார்டு ரீட்டாஸ் தெருவில் ரூ.8 லட்சத்தில் கான்கிரீட் தளம், 43-வது வார்டு கலை நகரில் (ரேஷன் கடை அருகே) ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் தளம், 9-வது வார்டு விநாயகர் தெருவில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் செல்வகுமார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர்கள் அருள் சபிதா ரெக்ஸலின், தினகரன், விஜயன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×