search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில்துறையினர் கோரிக்கை: முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி
    X

    கோப்புபடம். 

    தொழில்துறையினர் கோரிக்கை: முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி

    • மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர்.
    • மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் விளக்கி, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற்று, சிறு, குறு பனியன் தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழில்துறையினரின் பாதிப்பு குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    Next Story
    ×