என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
    X

    சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

    • சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டையில் வானமாதேவி செல்லும் சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் அவ்வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ம் மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×