search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடைகள்"

    • கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர்.
    • கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா என்றும் பார்வையிட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா, பட்டாசு கடைக்கு தேவையான பொருட்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் அங்கு உள்ளதா தீ தடுப்பு சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

    • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பட்டாசு, இனிப்பு மற்றும் ஜவுளிகள் வாங்கி பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

    அனுமதி

    இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது கடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று கடைகளில் பட்டாசுகள் வியாபாரத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சிவகாசியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஆர்வம்

    பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு ஆர்வமாக பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் பட்டாசு கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் பட்டாசு கடைகளில் மேலும் கூட்டம் குவியும் என்பதால் புதிய ரக பட்டாசுகளை வாங்கி விற்பனைக்கு குவிப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    • இந்த ஆண்டு பட்டாசு கடை திறப்பதற்கு கடைகளை தயார் செய்து வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் விண்ணப்பித்து இருந்தனர்.
    • கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருவதாக வியாபாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம்.

    இதற்காக ஒவ்வொரு கடை வீதிகளிலும் பட்டாசு கடை தற்காலிகமாக திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை நடைபெறுவது உண்டு. இதற்காக வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் தடையில்லா சான்று (என்.ஓ.சி.) வாங்கி கடையை திறப்பது வழக்கம். அதை வைத்து போலீசில் அனுமதி வாங்குவார்கள்.

    அதே போல் இந்த ஆண்டு பட்டாசு கடை திறப்பதற்கு கடைகளை தயார் செய்து வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இதில் கான்கிரீட் கட்டிடமாக இருக்கும் கடைகளுக்கு மட்டும் தீயணைப்புத் துறையில் இருந்து என்.ஓ.சி. (தடையில்லா சான்று) வழங்கி உள்ளனர்.

    'தகர ஷீட்' போடப்பட்ட கடைகளுக்கு என்.ஓ.சி. தர முடியாது என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் சென்னையில் தற்காலிக பட்டாசு கடை திறக்க முடியாமல் 1500 வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

    சென்னை பாண்டி பஜாரில் பட்டாசு கடை நடத்தும் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக நாங்கள் பட்டாசு கடை நடத்தி வருகிறோம். அதற்கான லைசென்ஸ் எங்களிடம் உள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு பட்டாசு கடைக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகள் புது நிபந்தனை விதித்து உள்ளனர். தகர ஷீட் உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    25 வருடமாக எல்லோரும் தகர ஷீட் அமைத்துதான் தற்காலிக கடை நடத்தி வருகிறோம். அப்போதெல்லாம் கிடைத்த அனுமதி இப்போது வழங்க மறுப்பது ஏன்?

    நாங்கள் செலவு செய்து லைசென்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடையை தயார் செய்து வைத்துள்ளோம்.

    ஆனால் தீயணைப்புத் துறையினர் திடீரென புது நிபந்தனை விதிக்கின்றனர். இதை முன்கூட்டியே வியாபாரிகளுக்கு அவர்கள் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.

    சென்னையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுமதிக்காக கேட்கப்பட்டிருந்த நிலையில் 300 கான்கிரீட் கடைகளுக்கு மட்டும்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட தகரஷீட் கடைகளுக்கு அனுமதி இல்லை என கூறி வருகின்றனர்.

    இதை முன்கூட்டியே தீயணைப்புத் துறையினர் அறிவிக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. இன்னும் லைசென்ஸ் வழங்காமல் கடைக்காரர்களை அலைக்கழிக்கிறார்கள். இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருகிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா கூறுகையில், தகர ஷீட் கடைகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக இன்று முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

    பட்டாசு கடை அமைக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5,200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அந்த விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தகுதியான விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கி வருவதாகவும் அதிகாரி பிரியா தெரிவித்து உள்ளார்.

    • பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன.
    • பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறை , செம்ப னார்கோயில், சீர்காழி, குத்தாலம், மங்க நல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் 300க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.

    இந்நிலையில் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கடை உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் கலெக்டர் மகா பாரதி தலைமையில் மயிலா டுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.மீனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தொட ர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் மகா பாரதி பட்டாசு கடைகளில்உரிய பாதுகாப்பு நடவடி க்கை களை மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறு த்தினர்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பட்டாசு கடை உரிமை யாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் மயிலாடுதுறை தாசில்தார் சபிதா, தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
    • அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008–ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதாவது, பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் போட்டோ ஆதார் அட்டை, உரிம கட்டணம் ரூ.500 (அரசு கருவூலத்தில் செலுத்தும் சீட்டு மூலம்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டிடமாக இருந்தால் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி (ஏ4 அளவில்), விண்ணப்பங்களை வரும் 24-ந் தேதி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    அதன் பிறகு பெறப்படும். விண்ணப்பங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்று விசாரித்தனர்.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட தீபாவளி பட்டாசு கடைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது சிவகாசி நேரடி விற்பனை என்ற போர்வையில் ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடலூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர் நேற்று அதிரடி சோதனை நடத்திவிதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,பயிற்சிசப்-.இன்ஸ்பெக்டர் விஜய்,தலைமைகாவலர்சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா?   என்றும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் தரம்,தயாரிப்பு தேதி ஆகியவை ஆய்வு செய்தனர்.

    • தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
    • வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்யிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மனு அளித்தார். மனுவில் வருகின்ற தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வ .உ. சி. திடலில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடம் ஆகும். வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது. பின்புறம் எண்ணை குேடான்கள் உள்ளது.

    இந்த இடத்தில் பட்டாசு கடை அமைக்க பொருத்தமான இடம் இல்லை. இந்த இடம் அதிகமாக போக்குவரத்து ஏற்படும் இடமாகும்.

    திண்டிவனத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ் அனைத்தும் இந்த வழியாக தான் செல்லும் பயணிகள் அதிகளவில் நின்று செல்லும் இடமாக இது உள்ளது. வ.உ.சி. திடலில் பின்புறம் 3 ஹோட்டல்கள் உள்ளன திடீரென ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    எனவே இந்த இடத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி தரக் கூடாது என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் வருமாறு:-

    திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் புகைப்படம்.

    மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இந்த தேதிக்குள் கிடைக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். 30-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பங்கள் மீது 15ந் தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×