search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apply before"

    • பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் வருமாறு:-

    திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் புகைப்படம்.

    மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இந்த தேதிக்குள் கிடைக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். 30-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பங்கள் மீது 15ந் தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×