search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மண்டல மேலாளர் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொது மக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கருர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி அன்று 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி அன்று 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி அன்று 520 கூடுதல் பஸ்களும், மேலும் திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி அன்று 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11-ந் தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.மேலும் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தீபாவளி முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×