search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவேல மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    போக்குவரத்துக்கு இடையூராக வளர்ந்துள்ள கருவேல மரங்கள்.

    கருவேல மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

    • கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் அபாயத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவாடனை

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினதில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் செல்வது வழக்கம்.

    தேவிப்பட்டினத்தில் இருந்து எஸ்.பி. பட்டினம் வரை உள்ள இருபுறமும் சாலையில் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டி கள் மிகுந்த அச்சத்தில் சாலையில் பயணிக் வேண்டி உள்ளது. மேலும் சாலையின் வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் சாலையில் செல்லும் போது எதிரில் கனரக வாகனம் வந்தால் ஒதுங்கக் குட முடியாத சூழ்நிலை ஏற் படுகிறது. இதனால் வாகன யோட்டிகளுக்கு காயம் மற்றும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனை நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக உள்ளனர்.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×