search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை"

    • தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நடந்தது.
    • டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய தலைவர் உறுதியளித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேலாளர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன.

    கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசியதாவது:-

    தேவகோட்டை ஒன்றியத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பில் குறைபாடுகள் உள்ளது அவற்றை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு, இழப்பீடு அனைத்து கிராமங்களுக்கும் சரியான முறையில் கிடைத்திட வேண்டும்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அனைத்து கிரா மங்களின் உள்ள நீர் தேக்க தொட்டிகள் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் டெங்கு தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஒன்றிய கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தபால் அனுப்பியும் அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் உள்ளனர். இதனால் அந்தந்த துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூற முடியாமல் உள்ளது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் கிராம ஊராட்சிகளில் முதல் அனைத்து கூட்டங்களுக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தும் தற்பொழுது நடைபெற்ற கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    12 வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஜான்சிராணி : கொடுங்காவயல் கிராமத்தில் தற்பொழுது புதிதாக போடப்பட்ட பாலம் சேதமடைந்து உள்ளது. அதனை உடனே சரி செய்ய வேண்டும். மருதவயல் கிராமத்தில் சாலைகள் பாதி அளவு மட்டுமே போடப் பட்டுள்ளது.

    தலைவர்: சம்பந்தப்பட்ட பாலத்தினை ஆய்வு செய்து உடனே அதனை சரி செய்ய வேண்டும். மேலும் மருத வயல் சாலை குறித்து ஆணையாளர் பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மத்திய மந்திரிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

    கன்னியாகுமரி, நவ.23-

    மத்திய மந்திரி ஜெய்சங்க ருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள் ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெதலீஸ் (வயது-51). இவரது தலைமையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் 17 பேரும் ஓமன் நாட்டில் உள்ள துக்கம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மஸ்கட் பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர். இவர்களுக்கு ஓமன் நாட்டு விசைப்படகு உரிமையாளர் கடந்த 3 மாத காலமாக ஊதியம் அளிக்கா மல் இருந்து வந்ததாக கூறப்பட்டுகிறது.

    மீனவர்கள் ஒமன் நாட்டில் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து அதனை ஒரு அரபி உரிமை யாளரிடம் ஒப்படைத்து அதற்குரிய சம்பளத்தை பெற்று வந்தனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த அரபி ஒவ்வொரு மாதமும் மீன்பிடித்ததற்குரிய சம்பளத்தை கொடுக்கும் போதெல்லாம் ஒரு தொகையை பிடித்தம் செய்துவிட்டு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பலமுறை சம்பள பிடித்தம் செய்யப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

    இதனால் பெதலீஸ் அந்த விசைப்படகு உரிமையா ளரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெதலீசை, விசைப்படகு உரிமையாளர் தரப்பினர் சட்ட விரோத மாக சிறைபிடித்து சென்ற தாக அவருடன் வேலைக்குச் சென்ற பிற மீனவர்கள் பெதலீஸ் மனைவி சோபா ராணிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள பிற மீனவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக உணவு பொருட்களையும் விசைபடகு உரிமையாளர் தரப்பில் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது.

    இதையடுத்து அவர் தனது கணவரை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதேபோல் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்ற மீனவர்களின் குடும்பத் தினரும் அதிகாரி களிடம் கோரிக்கை வைத்துள் ளார்கள்.குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

    உணவு அளிக்கப்படாமல் சித்ரவதைக்கு உள்ளாகி யிருக்கும் மற்ற மீனவர்களின் குடுமப்பத்தினரும் கவலை யில் ஆழ்ந்துள்ளனர். எனவே குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 மீனவர்களின் குடும்பத்தி னரும் அந்தந்த மாவட்டங் களில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நகராட்சி மூலம் சுத்தம் செய்து அசுத்தமான பொருட்கள் மற்றும் மண் ஆகியவற்றை கிழக்கு தெருவில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 9-வது வார்டு கிழக்கு தெரு முழுவதும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து திட்டக்குடி நகராட்சி மூலம் சுத்தம் செய்து அதிலிருந்து எடுக்கப்பட்ட அசுத்தமான பொருட்கள் மற்றும் மண் ஆகியவற்றை கிழக்கு தெருவில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

    தற்பொழுது கிழக்கு தெரு முழுவதும் சாக்கடையால் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுவதோடு அதின் மேல் பள்ளி குழந்தைகள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தக் கூடிய வகையில் கழிவு நீரை சாக்கடையை சாலையில் போட்டு சென்றுள்ள திட்டக்குடி நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்குமாறு திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட ஆளூர் சமூக நலக்கூடத்தில் மக்களு டன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 1,2,3 வட்டங்கள் அடங்கிய ஆளூர் பகுதியில் நடை பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அரங்குகள் ஒதுக்கப்பட் டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கிய தோடு, தங்களுக்கு தேவை யான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அலுவ லர்களிடம் கேட்டறிந்தனர்.

    முகாமில் எரிசக்தித்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம் குறித்த சேவைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறையில் கட்டு மான வரைபட ஒப்பு தல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின்கீழ் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    காவல் துறையின் கீழ் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக, நில அபகரிப்பு, மோசடி, வரதட்சணை மற்றும் இதர புகார்கள், போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் அளிக்கவும், மாற்றுத்திற னாளிகள் துறையில் பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத்திற னாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக்கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள், சுய தொழில் வங்கி கடன் உதவி, கல்வி உதவித்தொகை தொழிற் பயிற்சி ஆகியவற்றிற்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், கூட்டுறவு துறை யின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம், ஆதி திராவிடர் நலத் துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, சலவைப்பெட்டி, தையல் எந்திரம் மற்றும் இதர உதவிகள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ கடனுதவி ஆகிய திட்டங்களில் விண் ணப்பிக்கிறவர்கள் அதற்கு ரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பிக்கலாம். தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவுசெய்ய வேண்டியிருப்பின், அக்கோ ரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப் பாக கொண்டுவர வேண் டும்.

    முகாம் ஆளூர் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் மிகவும் பேரூ தவியாக இருக்கும் என்பதை தெரிவத்துக்கொள்கிறேன். முகாமில் 252 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பால சுப்பிரமணியன், கல்குளம் தாசில்தார் கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார், அனைத்து துறை அலுவ லர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினம் தோறும் குப்பைகள் அகற்றுவதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 162 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனியார் நிறுவனம் சார்பில் 335 துப்புரவு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்தல், அரசு பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், குப்பைகளில் உரம் மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாத தனியார் நிறுவன டென்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாநகராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது கவுன்சிலர்கள் மீண்டும் கலெக்டர் அருண் தம்புராஜிடம் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை என மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென்று நேரடியாக வந்தார். அப்போது அங்கு தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது தனியார் நிறுவனம் சார்பில் பராமரித்து வரும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என கேட்டபோது 294 நபர்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 41 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனம் மூலமாக தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குப்பைகள் அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு, சுகாதாரம் சீரழிந்து வருகின்றது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.ஆகையால் துப்புரவு பணியாளர்கள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி எந்தெந்த பகுதியில் குப்பையில் உள்ளது என்பதனை பார்வையிட்டு அகற்ற வேண்டும். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்க வேண்டும். ஆகையால் துப்புரவு பணியாளர்கள் தினந் தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருங்காலங்களில் இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என்பதால் தூய்மை பணியில் சரியான முறையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தனியார் நிறுவனம் அனைத்து பணியாளர்களையும் நியமித்து சரியான முறையில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்தி ராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா, துப்புரவு ஆய்வாளர்கள் அப்துல் ஜாபர், கிருஷ்ணராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், சங்கீதா, பார்வதி, சுபாஷிணி ராஜா, விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், சரவணன், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுப்புத்தூர் வாய்க்காலை தூர்வார அறிவுறுத்தப்பட்டு உள்ளது
    • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, தொண்டைமான்நகர் பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் நகர்புற வீடற்றோர்க ளுக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தினை நேசக்கரம் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இவ்வில்லத்தில் 35-க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி வருகின்றனர். இங்கு தங்கி உள்ளவர்களுக்கு தேவை யான குடிநீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட வைகள் போதுமான அள வில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில், தொடர்ந்து மழையின் காரணமாக மழைநீர் வெள்ள பாதிப்பு களை தவிர்க்கும் வகையில் காட்டுப்புதுக்குளம் வாய்க்காலில் சேர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள நகராட்சி அலுவ லர்க ளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட சமூகநல அலுவ லர்கோகுலப்பிரியா, வட்டாட்சியர் கவியரசன், நகராட்சி அலுவலக மேலா ளர் காளியம்மாள் மற்றும் அரசு அலுவலகள் பலர் உடனிருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
    • விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடு தல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரி வித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஆண்டிம டம்,ஜெயங்கொண்டம் வட்டா ரங்களில், கார்த்தி கை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலையில் நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வ து மிகவும் முக்கியமா னதாகும்.

    நல்ல தரமான விதைக ளை விவசாயி களுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை தேவையான நடவ டிக்கை களை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

    விதைகள் வாங்கும் போது உரிய விற்பனை ரசீது கேட்டுப் பெற வேண்டி யது மிகவும் அவசியமாகும். விற்பனை ரசீது அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    நில கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் விற்ப னை உரிமம் பெற்று இருக்க வேண்டும். நல்ல மு ளைப்புத் திறன் உள்ள நிலக்கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

    கூடுதல் விலைக்கு விற்றாலோ எடைகுறைவாக விற்றாலோ ரசீது இல்லாமல் விற்றாலோ விதைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் தங்க ளுக்குத் தேவையான விதை களை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம்.

    • நேரில் ஆய்வு செய்தபின் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி
    • இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது.

    விஜய்வசந்த் எம்.பி. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

    கடுமையான முயற்சி களின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட் டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற் கொள்ள வேண்டியதுள்ளது.தற்பொழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படு கிறது. இந்த பணிகளை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். இந்த பணிக்கான திட்ட இயக்கு னர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்கா ரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்த பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட விஜய்வசந்த் எம்.பி. இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்ப தற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு உள்ள நடைமுறை சிர மங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்ப டும் என துறை அதிகாரி களுக்கு உறுதி அளித்தார்.

    ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன‌.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்திருந்தனர். இதனை மீறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய பொது மக்களை கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வந்ததோடு , போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்கு மார், தலைமை காவலர்கள் குமரேசன், வினோபாலன், போலீஸ்காரர் சுபாஷ் ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவர த்துக்கு இடையூறாகவும், போலீசார் எச்சரிக்கை செய்ததை மீறியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிளை போலீசார் வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும் கடலூர் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை செய்தனர்.

    இதனை தொடர்ந்து ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ராமநாதபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணிகளை நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் பார்வையிட்டார்.
    • பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டு சரி செய்யும் பணிகளை நகர சபை தலைவர் ஆர்.கே கார்மேகம் பார்வையிட்டார். அப்போது அவர் மாலைமலர் நிரு பருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக ராமநாத புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்சனை தொடர்ந்து வருகிறது.இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் அவ்வப்போது நானே நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். வார்டு கவுன் சிலர்களின் கோரிக்கை களை ஏற்றும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

    குறிப்பாக கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட ஒரு சில குளறுபடிகளால் நகரின் பிரதான பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண ஆவண செய்து வருகிறோம்.இதற்கிடையில் பொது மக்கள் நலன் கருதி அவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகிறோம்.பொதுமக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியில் ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரைக்கு செல்லும் தனியார் பஸ்களில் ஆபத்தை உணராமல் பயணிகள் படியில் தொங்குகின்றனர்.
    • தனியார் பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும்.

    மேலூர்

    மேலூரில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அதிக அளவில் செல்கின்றனர்.

    காரைக்குடி, கல்லல், பொன்னமராவதி போன்ற வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் மேலூர் பஸ் நிலை யம் முன்பு நிறுத்தி மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். வெளி யூர்களிலிருந்து வரும் பயணி கள் எண்ணிக்கை காலை நேரங்களில் அதிக அளவு உள்ளது.

    மேலும் இங்கிருந்து ஏறும் பயணிகளும் பஸ்சில் உள்ளே செல்ல முடியாமல் இரு புறமும் உள்ள படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். மேலூர் மதுரை நான்கு வழிச்சாலை என்பதால் அதிவேகமாக வாகனங்கள் செல்வதாலும் விரைவாக மதுரைக்குச் தனியார் பஸ்கள் செல்கிறது. இதனால் பயணிகள் பயணி நேரம் மிக குறைவாக இருப்பதால் நாம் விரைந்து சென்று விட முடியும் என்று ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்கின்ற னர்.

    எனவே மேலூர் பஸ் நிலையத்தில் படிக்கட்டு களில் தனியார் பேருந்து களில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும். குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரை இந்த அவல நிலை நீடிக்கிறது. மீறி படிக்கட்டு களில் தொங்கி செல்லும் பயணிகளை வசூலை கருத்தில் கொண்டு ஏற்றும் தனியார் பேருந்துகள் மீது போலீசார் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் விலைமதிப்பற்ற பயணி களின் உயிரை காப்பாற்ற முடியும். மேலூர் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

    • வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
    • வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மெண்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

    வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடி சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள் முன்வர வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மெண்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×