search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களுடன் முதல்வர்"

    • அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது.
    • ஆட்சியில் இருக்கிற நேரத்தில் மக்களுக்கு திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கி கொண்டே இருப்போம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் 35 நாட்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து 'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை விழா நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    மேலும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணிநியமன ஆணைகளை வழங்கியும் அதை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரையை பதிக்கக் கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம். அதிலே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக்கொண்டே போக முடியும்.

    இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிற திட்டங்களாக அமைந்திருக்கிறது. இந்த வரிசையில், இந்த திராவிட மாடல் அரசால், உருவாக்கப்பட்ட திட்டம்தான் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்.

    'மக்களிடம் செல் மக்களோடு வாழ். மக்களுக்காக வாழ்' என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்து விடமாட்டோம்.

    ஆட்சி இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். வாதாடுவோம். ஆட்சியில் இருக்கிற நேரத்தில் மக்களுக்கு திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கி கொண்டே இருப்போம்.

    அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதை முழுமையாக போக்கவேண்டும் என்பதற்காகதான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக 'மக்களுடன் முதல்வர்' என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18.12.2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

    அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம்.

    தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகளை முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

    முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.

    இது தொடர்பாக, மேலும் சில புள்ளிவிவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.

    மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.

    குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில்

    3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.

    கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை இலட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.

    இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன்.

    மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கி இருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு எழிலன், பரந்தாமன் எம்.எல்.ஏ. கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் புத்தகம் பரிசளித்து கவுரவித்தார். அனைவரையும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார்.

    முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"
    • 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்"

    * ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம், வாதாடுவோம்.

    * ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவோம்.

    * "மக்களுடன் முதல்வர்" திட்டம் மூலம் அரசு சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    * மக்களை தேடி அரசு இயந்திரம் செல்கிறது.

    * மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"

    * 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

    * இதுவரை 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.

    * தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    • பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
    • பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    கோவை:

    தமிழகத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி எஸ்.என்.ஆர் கல்லூரி, கருமத்தம் பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபம், பேரூர் ராமலிங்கஅடிகளார் அரங்கம், மலுமிச்சம்பட்டி திவ்யம் மகால் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு சென்றனர். அந்த வகையில் மட்டும் 1026 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதுதவிர மற்ற அரசுத்துறைகள் தொடர்பான 1284 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன. அவை தற்போது முதல்வரின் முகவரி துறையின்கீழ் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக கடந்த 18-ந்தேதி மட்டும் 2310 கோரிக்கை மனுக்கள் குவிந்து உள்ளன. அவை உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

    இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டலம் வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபம், வடக்கு மண்டலம் சரவணம்பட்டி சமுதாயக்கூடம், மத்திய மண்டலம் செம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளி, கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் திருமண மண்டபம், பொள்ளாச்சி நகராட்சி மகால், காரமடை மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனி கொங்கு மகால் மற்றும் அன்னூர், கிணத்துக்கடவு, ஆனைமலை டவுன் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இதில் பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதுதவிர முதல்வ ரின் முகவரி துறைக்கு வந்திருந்த 816 மனுக்களையும் சேர்த்து மொத்தம் 2396 கோரிக்கை மனுக்கள் வந்து சேர்ந்து உள்ளன.

    கோவை மாவட்டத்தில் கடந்த 18, 19-ந்தேதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில் மட்டும், பொதுமக்களிடம் இருந்து 4705 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 2310 கோரிக்கை மனுக்கள் கிடைக்கப்பெற்று உள்ளன. அதேபோல நேற்று நடந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு 2395 மனுக்களை அளித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களின் வாயி =லாக 4705 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

    இதுதவிர் சிறப்பு முகாம்கள் நடக்கும் பகுதியில் இ-சேவை மையம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தேவையான ஆவணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு 13 அரசு துறைகளுடன் தொடர்புடைய 52 விதமான சேவைகளை உடனடியாக பெற இயலும். மேலும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 நாட்களில் தீர்வு பெற்றுதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

    * மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென் மாவட்ட மக்களை காப்போம்.

    * மீட்பு பணி தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    * தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது.

    * தற்போது தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    * சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * அரசின் சேவைகளை எளிதில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு மக்களுடன் முதல்வர் திட்டம் உதவியாக இருக்கும்.

    * முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மக்களுடன் முதல்வர் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

    * மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளாக 13 துறைகள் கண்டறியப்பட்டு அதன் வாயிலாக தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார்.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார்.

    இந்த விழா முடிந்ததும் எஸ்.என்.ஆர் கல்லூரியில் இருந்து கார் மூலமாக காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்துக்கு செல்கிறார். அங்கு மாநகராட்சி சார்பில் 47 ஏக்கர் பரப்பளவில் ரூ.133.21 கோடி மதிப்பில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    முன்னதாக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கும் எஸ்.என்.ஆர் கல்லூரி பகுதி, காந்திபுரம் நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை உள்பட அனைத்து பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் விழா நடைபெறும் இடங்கள், முக்கிய பகுதிகளில் சோதனையும் மேற்கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட ஆளூர் சமூக நலக்கூடத்தில் மக்களு டன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 1,2,3 வட்டங்கள் அடங்கிய ஆளூர் பகுதியில் நடை பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அரங்குகள் ஒதுக்கப்பட் டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கிய தோடு, தங்களுக்கு தேவை யான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அலுவ லர்களிடம் கேட்டறிந்தனர்.

    முகாமில் எரிசக்தித்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம் குறித்த சேவைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறையில் கட்டு மான வரைபட ஒப்பு தல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின்கீழ் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    காவல் துறையின் கீழ் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக, நில அபகரிப்பு, மோசடி, வரதட்சணை மற்றும் இதர புகார்கள், போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் அளிக்கவும், மாற்றுத்திற னாளிகள் துறையில் பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத்திற னாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக்கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள், சுய தொழில் வங்கி கடன் உதவி, கல்வி உதவித்தொகை தொழிற் பயிற்சி ஆகியவற்றிற்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், கூட்டுறவு துறை யின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம், ஆதி திராவிடர் நலத் துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, சலவைப்பெட்டி, தையல் எந்திரம் மற்றும் இதர உதவிகள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ கடனுதவி ஆகிய திட்டங்களில் விண் ணப்பிக்கிறவர்கள் அதற்கு ரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பிக்கலாம். தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவுசெய்ய வேண்டியிருப்பின், அக்கோ ரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப் பாக கொண்டுவர வேண் டும்.

    முகாம் ஆளூர் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் மிகவும் பேரூ தவியாக இருக்கும் என்பதை தெரிவத்துக்கொள்கிறேன். முகாமில் 252 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பால சுப்பிரமணியன், கல்குளம் தாசில்தார் கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார், அனைத்து துறை அலுவ லர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×