என் மலர்
நீங்கள் தேடியது "KKSSR Ramachandran"
- இனி வரும் காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகளில் பயிற்சிகளும், வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படும்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் உரிய நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.
சென்னை:
காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியானது குறித்து சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், ஜி.கே.மணி, மரகதம் குமரவேல், செல்வப்பெருந் தகை, எஸ்.எஸ்.பாலாஜி, மாரிமுத்து, நாகை மாலி ஆகியோர் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசினார்கள்.
குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக வெடி மருந்துகளை கொண்டு வந்து பட்டாசு தயாரித்துள்ளனர். இதனால்தான் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
வருங்காலங்களில் இது போன்ற விபத்தை தடுக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அனுப்பி பணிகளை துரிதப்படுத்தினார். இறந்தவர்கள் குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு சார்பில் நிதி உதவி அளித்திருக்கிறார் என்று குறிப்பிட்டனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் பேசும் போது, அரசு வழங்கியுள்ள நிதி போதாது. இன்னும் அதிகமாக நிதி வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றார்.
வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசும்போது, "வெளிநாடுகளில் உள்ளது போல் பட்டாசு ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை அணிந்து பணியாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-
நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் அரசு வழங்கியுள்ளது. எங்களது விருதுநகர் மாவட்டத்தில் 1,076 பட்டாசு ஆலைகள் இருந்தாலும் பெரும்பாலான விபத்துக்கள் சிறிய பட்டாசு ஆலைகளில்தான் நடை பெற்று வந்தது. அதற்கு காரணம் லாப நோக்கில் தொழிலை செய்வதால்தான் திடீர் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இதற்காக நாங்கள் தேவையான கருத்தரங்குகளை நடத்தி உரிய பயிற்சியும் கொடுத்து இருக்கிறோம். காப்பீடும் செய்து கொடுக்கிறோம்.
எனவே இனி வரும் காலங்களில் எந்த மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை இருந்தாலும் அதை ஒழுங்குபடுத்தி தேவையான பயிற்சிகளும் வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் உரிய நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
- அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
மார்ச் மாதத்திற்குள் முதலமைச்சர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ றியிருப்பதாவது:-
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை 2023-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படைப் பொதுசேவைகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 இலட்சம் மனுக்களுக்கு ஒரே ஆண்டில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






