search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

    • நேரில் ஆய்வு செய்தபின் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி
    • இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது.

    விஜய்வசந்த் எம்.பி. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

    கடுமையான முயற்சி களின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட் டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற் கொள்ள வேண்டியதுள்ளது.தற்பொழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படு கிறது. இந்த பணிகளை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். இந்த பணிக்கான திட்ட இயக்கு னர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்கா ரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்த பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட விஜய்வசந்த் எம்.பி. இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்ப தற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு உள்ள நடைமுறை சிர மங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்ப டும் என துறை அதிகாரி களுக்கு உறுதி அளித்தார்.

    Next Story
    ×