search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்கள்"

    ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன‌.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்திருந்தனர். இதனை மீறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய பொது மக்களை கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வந்ததோடு , போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்கு மார், தலைமை காவலர்கள் குமரேசன், வினோபாலன், போலீஸ்காரர் சுபாஷ் ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவர த்துக்கு இடையூறாகவும், போலீசார் எச்சரிக்கை செய்ததை மீறியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிளை போலீசார் வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும் கடலூர் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை செய்தனர்.

    இதனை தொடர்ந்து ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹெல்மெட் ல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நாகை செம்போடை ஆர்.வி கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    செம்போடை ஆர் வி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது வேதாரண்யம் சென்று முடிக்கப்பட்டு பின்பு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    • மேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்

    மேலூர் அருகே கீழவளவை அடுத்துள்ள உடன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா என்ற சோனை காளை(வயது23). நேற்று இரவு தனது நண்பர்கள் நாகராஜ், முத்துக்குமார் ஆகியோருடன் கீழவளவில் இருந்து உடன்பட்டிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரைக்குடியில் இருந்து முத்துக்குமார் என்பவர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீழவளவு போலீஸ் நிலையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் தப்பியோடி விட்டனர்.
    • டிரம் செட் வாசிக்க செல்வது போல சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அடுத்த இரும்புதலை அருகே மெலட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் மோட்டார்சைக்கிளை வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    பின்னர் போலீ சார் மோட்டார் சைக்கிளை கைபற்றி மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பூண்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முத்து (வயது 27), அதே ஊரை சேர்ந்த ஏழுமலை ( 20) என தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து மெலட்டூர் போலீசார் ஏழுமலை, முத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏழுமலை, முத்து இருவரும் டிரம்செட் வாசிப்பவர்கள் என்பதும், திருவிழா மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு டிரம் செட் வாசிக்க செல்வது போல சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிமிருந்து 20 கஞ்ச பொட்டலங்களையும்.

    கஞ்ச விற்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.
    • ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை சிலேட்டர்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் சம்பவத்தன்று பெருந்துறையில் இருந்து சேனிடோரியம் செல்லும் வழியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரங்குசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாரத விதமாக ரங்குசாமியின் மோட்டார்சைக்கிள் சரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.

    ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர்.

    அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் செல்லூர் சுயராஜபுரம் பாலமுருகன், எஸ்.கொடிக்குளம் கதிரவன், செல்லூர் சிவராமன், மீனாம்பாள்புரம் சத்திய மூர்த்தி மெயின் ரோடு மகாபிரபு என்பது தெரியவந்தது.

    இவர்கள் மதுரையில் செயல்பட்டு வரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் சமூக வலை தளத்தில் தங்கள் சாகசத்தை பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிள் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சாலபோகம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (வயது47) .

    இவர் தனது மனைவி மேனகாவுடன் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கபிஸ்தலம் வழியாக திருவையாறு நோக்கி சென்றார்.

    கருப்பூர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகில் எதிரே அவர்கள் சென்ற போது கருப்பூர் குடியானத்தெருவை சேர்ந்த திவாகர்( 25) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பாாலகிருஷ்ணன், அவரது மனைவி மேனகா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் திவாகரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள மகாசிபுதூர் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (21). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை- அந்தியூர் ரோட்டில் தோப்பு காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கோவிந்தன் மோட்டார் கைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே கோவிந்தன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • விபத்தில் ஞானபிரகாஷ் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வசந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய தாஸ். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 22). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெரு ந்துறை-குன்னத்தூர் ரோட்டில் சீனாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றோரு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தை சேர்ந்த கபிலன் (18) மற்றும் கோபிசெட்டிபாளைம் அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரது மகன் ஜெய் ஸ்ரீ பாலாஜி (18) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ஞான பிரகாஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் ஜெயஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஞானபிரகாஷ் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ஜெய்ஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் பெரு ந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் அண்ணன், தம்பி 2 பேரும் வீட்டிற்கு சென்றனர்.
    • ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(44). இவரது தம்பி தேவராஜ்(41). இருவருக்கும் திருமணம் ஆகி அருகருகே வசித்து வருகின்றனர்.

    பன்னீர்செல்வம், தேவராஜ் 2 பேரும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பேல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    2 பேரும் தினமும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து பணி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டிற்கு சென்றனர். பன்னீா்செல்வம் வண்டியை ஓட்டி செல்ல தேவராஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது முன்னால் சென்ற தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (40) என்பவரது மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.

    இதில் நிலை தடுமாறி பன்னீர்செல்வம், தேவராஜ் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பன்னீர்செல்வத்துக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தங்கவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சம்பவத்தன்று கே.என்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு ந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது.

    அதே போல் சதுமுகை பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் டி.ஜி.புதூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருடப்பட்டதாக பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஏளூர் வேட்டு வன் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (36) என்பதும், அவர் நவீன்குமார் மற்றும் கணேசன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோட ம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதேபோல் ஈரோடு சுத்தானந்தா நகரை சேர்ந்த பரத் (27) என்பவர் வேலை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    வெட்டுக்காட்டு வலசு பிரிவு அருகே வந்தபோது பரத் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஏறி வந்த போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சசிகுமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத்திற்கு மூக்கில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ×