search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இசை நிகழ்ச்சி செல்வது போல நடித்து ெலட்டூர் அருகே கஞ்சா விற்பனை
    X

    கஞ்சா வழக்கில் கைதானவர்கள்.

    இசை நிகழ்ச்சி செல்வது போல நடித்து ெலட்டூர் அருகே கஞ்சா விற்பனை

    • அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் தப்பியோடி விட்டனர்.
    • டிரம் செட் வாசிக்க செல்வது போல சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அடுத்த இரும்புதலை அருகே மெலட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் மோட்டார்சைக்கிளை வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    பின்னர் போலீ சார் மோட்டார் சைக்கிளை கைபற்றி மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பூண்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முத்து (வயது 27), அதே ஊரை சேர்ந்த ஏழுமலை ( 20) என தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து மெலட்டூர் போலீசார் ஏழுமலை, முத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏழுமலை, முத்து இருவரும் டிரம்செட் வாசிப்பவர்கள் என்பதும், திருவிழா மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு டிரம் செட் வாசிக்க செல்வது போல சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிமிருந்து 20 கஞ்ச பொட்டலங்களையும்.

    கஞ்ச விற்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×