search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 injured"

    • லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர்

    வேடசந்தூர்:

    மதுரை செல்லூைர சேர்ந்தவர் அய்யப்பன் (வயது37). இவர் ஒரு லாரியில் கரூரில் இருந்து துண்டுகளை ஏற்றி க்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். லாரியில் மதுரையை சேர்ந்த ராஜா (21), பாண்டி (35) ஆகியோரும் இருந்தனர்.

    லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அய்யப்பன் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது.

    கடலூர்: 

    கடலூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீபிரியா. இவர் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார். இரவு 8.20 மணியளவில் ஜீப் பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது. இதில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா , சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் ஒரு போலீசார் உள்ளிட்ட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த போலீசார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மணிகண்டன் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
    • எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது.

    கடலூர்:

    புவனகிரி அருகே கூரை வீட்டிற்குள் கார் புகுந்து 3 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருேக உள்ள ஆதிவராக நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது. 

    இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டன் மனைவி அமாவாசை (80), தில்காலைக்கரசி (31), பிரவினா (18) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். ,இதனை பார்த்ததும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சாலபோகம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (வயது47) .

    இவர் தனது மனைவி மேனகாவுடன் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கபிஸ்தலம் வழியாக திருவையாறு நோக்கி சென்றார்.

    கருப்பூர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகில் எதிரே அவர்கள் சென்ற போது கருப்பூர் குடியானத்தெருவை சேர்ந்த திவாகர்( 25) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பாாலகிருஷ்ணன், அவரது மனைவி மேனகா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் திவாகரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், சேவகனுர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் சரத்குமார் (வயது 24). இவர் அழகுசமுத்திரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.

    அந்த குதிரை வண்டியை கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன்(25), சதீஷ்(23) ஆகிய 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தபடி சமூக வலைத ளங்களில் பதிவிடுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்தனர்.அப்போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீதுமோதியது. இதில் சரத்குமார், லோகநாதன், சதீஷ், ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து சரத்குமாரின் தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் குதிரை வண்டி பந்தயம் நடத்த தடை விதித்துள்ளனர்.

    திண்டிவனம் அருகே இன்று விபத்து சாலையில் கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் காயம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அணிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். டிரைவர், இவர் தனது உறவினர்கள் பொம்மையார்பாளையத்தை சேர்ந்த டால்பின் டிசோசா,நிதின் காசிநாத் காய் கட் வார்ட் ஆகியோரை மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு காரில் அழைத்துச் சென்றார் இந்த கார் திண்டிவனம் அருக கொள்ளார் பகுதியில் சென்றது. அப்போது அங்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்தபெண் மீது மோதா மல் இருக்க தேவசாகயம் காரை திருப்பி உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் காரில் வந்த3 பேரும் படு காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிகளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் விருத்தாச்சலம் -திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் இறையூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.அப்போது அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (28), பழனிவேல் மனைவி அன்புச்செல்வி (40) ,இறையூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் கலைமதி (20), ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி அளித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், என்பவர் தனது மகன் சரவணன் மற்றும் அவரது நண்பரான சென்னை படப்பை திரு.வி.க. நகரை சேர்ந்த வாசுதேவன் ஆகியோரை காரில், கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை கடலூர் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சா லையில், வேப்பூர் அடுத்த அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    அதில், காரில் பயணித்த விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் சரவணன், சென்னை அடுத்த படப்பையைச் சேர்ந்த வாசுதேவன், ஆகி யோர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கனவாய்காடு தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 53) இவர் தனது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் அண்ணன் சம்பத் ஆகியோருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டின் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை சம்பத் ஓட்டினார். அப்போது தியாகதுருகம் அருகே திம்மலை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த சிவப்பு நிற கார் இவரது காரை முந்தி சென்ற போது இவரது காரின் பக்கவாட்டில் மோதியது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த இவரது கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த ரவி, இவரது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் டிரைவர் சம்பத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சம்பத் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது.
    • பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி, காடாம்புலியூரிலிருந்து அரசு பஸ்ஒன்றுபண்ருட்டி நோக்கி வந்தது.பண்ருட்டி அருகேபணிக்கன்குப்பம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்து கொண்டிரு ந்தபோதுதிடீரென்று முன்பக்க டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் உள்பட 2 பேர் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே போல விருத்தாச்சலத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் தனியார் பஸ் ஒன்று அரசு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் குறிஞ்சிப்பாடிகண்ணாடி சேர்ந்த கிருஷ்ணமூர்த்திஎன்பவர் பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார். அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
    • குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனது மனைவி விஜயபாரதி வயது 26 , சசோந்த் (2 வயது குழந்தை) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சத்திரம் - குள்ளஞ்சாவடி சாலையில் அம்பலவாணன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென்று முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 வயது குழந்தை மற்றும் தாய், தந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×