search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 3 பேர் காயம்
    X

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 3 பேர் காயம்

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
    • குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனது மனைவி விஜயபாரதி வயது 26 , சசோந்த் (2 வயது குழந்தை) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சத்திரம் - குள்ளஞ்சாவடி சாலையில் அம்பலவாணன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென்று முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 வயது குழந்தை மற்றும் தாய், தந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×