search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car tire burst"

    எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், என்பவர் தனது மகன் சரவணன் மற்றும் அவரது நண்பரான சென்னை படப்பை திரு.வி.க. நகரை சேர்ந்த வாசுதேவன் ஆகியோரை காரில், கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை கடலூர் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சா லையில், வேப்பூர் அடுத்த அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    அதில், காரில் பயணித்த விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் சரவணன், சென்னை அடுத்த படப்பையைச் சேர்ந்த வாசுதேவன், ஆகி யோர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×