search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

    • எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • விபத்தில் ஞானபிரகாஷ் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வசந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய தாஸ். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 22). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெரு ந்துறை-குன்னத்தூர் ரோட்டில் சீனாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றோரு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தை சேர்ந்த கபிலன் (18) மற்றும் கோபிசெட்டிபாளைம் அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரது மகன் ஜெய் ஸ்ரீ பாலாஜி (18) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ஞான பிரகாஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் ஜெயஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஞானபிரகாஷ் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ஜெய்ஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் பெரு ந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×